tamilnadu

img

திரிபுராவில் எதிர்க்கட்சிகளின் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 11-  திரிபுராவில் பாஜக, ஆர்எஸ்எஸ் பரி வாரங்கள் எதிர்க்கட்சிகள் மீது நடத்தும் தாக்குதல்களை கண்டித்து கோவை யில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள் ளிட்ட கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற னர்.  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தில், தேர்தல் முடிவு கள் பாஜகவிற்கு பின்னடைவை ஏற் படுத்திய ஆத்திரத்தில் எதிர்க்கட்சி யினர் மீது வன்முறை தாக்குதலை பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று வன்முறையை கையில் எடுத்திருக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் நடவ டிக்கையை கண்டித்து நாடு முழுவ தும் கண்டன இயக்கத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதன்ஒருபகுதியாக கோவை சிவானந்தா காலனியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் கோவை மாவட்ட செயலா ளர் சி.பத்மநாபன் தலைமை ஏற்றார்.  ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வழக்க றிஞர் கருப்புசாமி, மதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் சேதுபதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர்கள் பங்கேற்று உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்று பாஜக, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.