tamilnadu

img

கம்யூனிஸ்ட்டுகளின் களப்பணிகளை உலகறியச்செய்ய வேண்டும்

கோயம்புத்தூர், ஜன.27- தெருவுக்குள், ஊருக்குள், தாலுகாவிற்குள் மட்டுமே உலவுகிற கம்யூனிஸ்ட்டுகளின் தியாகத்தை உலகறி யச்செய்ய வேண்டும் என்கிற உந்துதலின் உணர்வே களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் நூலை எழுதத் தூண்டியது என கோவையில் நடைபெற்ற நூல் வெளி யீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் தெரிவித்தார். கோவை மலையாளி சமாஜத்தில் குடியரசு தினத் தன்று (வியாழக்கிழமை) மக்கள் சிந்தனை மேடையின் 6ஆவது சிந்தனை அமர்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் எழுதிய “பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்” விழா நடைபெற்றது. விழாவிற்கு எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கா.சு.வேலாயுதன் தலைமை தாங்கினார்.  இந்திய மாணவர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.அசாருதீன் வரவேற்புரையாற்றினார்.  மார்க்சிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை நூலினை அறிமுகம் செய்து உரையாற்றினார்.  அவர் பேசுகையில், இடதுசாரிகளும், முற்போக்கு அமைப்பினரும் இணைந்து நடத்துகின்ற இந்த மேடை யில், பங்கேற்கிற வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 

பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்களின் ஒரு தொகுப்பில் ஐம்பது கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு  கட்டுரையும், கம்யூனிஸ்ட்டுகளின் களப் பணிகளையும், தியாகங்களையும் விவரிக்கிறது. இந்த நூலில் வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்று பல தியாகங்க ளைச் செய்த தொழிற்சங்கத் தலைவர்கள், உழைப்பா ளர்கள், சிறு வியாபாரிகள், துணிக்கடையில் பணி யாற்றிய தொழிலாளர்,  அரசு ஊழியர்களாக இருந்து நேரடியாக பங்காற்ற முடியாமல் வேறு பெயரில் பணி யாற்றியவர்கள்,  சிறு வணிகர்கள், தலித் மக்களுக்குக் கான போராட்டங்களில் முன் நின்று போராடியவர்கள் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டக் கள வரலாற்றை  நினைவு கூர்கிறது என்றார்.  முன்னதாக வயது மூப்பு என்றபோதும், எஸ்.வி.ராஜ துரை நூலினை முழுமையாக வாசித்து, ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு களை பட்டியலிட்டது நிகழ்வில் பங்கேற்றவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.  இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் ஏற்புரையாற்றி பேசுகையில், இந்நிகழ்வி ற்கு பத்திரிகையாளர் தலைமையேற்று நடத்துவது சிறப் பான ஒன்று. ஜான்ரீடு என்ற பத்திரிகையாளர், ரஷ்யப் புரட்சியின் போது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் விளைவாக “உலகை குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகத்தை எழுதினார்.  

அதேபோல, மார்க்சிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜ துரை எந்த பணியையும் மேலோட்டமாக செய்யமாட்டார். அதனுடைய சிறப்புகள் மற்றும் நிறைகுறைகளை முழுவதுமாக எடுத்துரைப்பார். லெனின் தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்த பெண் ஒருவர், தன்னை கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராக ஏற்க முடியுமா என கேட்டார். அதற்கு லெனின், கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் என்பவர் அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்பவராகத் திகழவேண்டும். போராட்டங்களில் ஏற்படுகின்ற இழப்புகளை எண்ணாமல், தியாக உணர்வோடு வாழ்பவராகவும்,  தனிப்பட்ட வாழ்வும் கட்சிப்பணியும் வேறுபாடின்றி இணைந்து  வாழ வேண்டும் என்றார்.  பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள் புத்தகத்தினை எனக்கு எழுத ஊந்துதலாக இருந்தது என்பது,   தியாகங்களின் வரலாற்றை நாம் கேட்டறிகி றோம். ஒப்பற்ற தியாக வாழ்க்கையை வாழ்கின்ற தோழர்களின் வாழ்க்கை முறை அந்த ஊருக்கு தெரியும் அல்லது அந்த தாலுகாவுக்கு மட்டும் தெரியும்,  ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து தெரியாது.  ஒரு கட்சி ஊழியர் கட்சிக்கான ஊழியராக பணியாற்று கின்றார்.  பல போராட்டங்களுக்கு தலைமையேற்கிறார். அவருடைய வரலாற்றை தலைவர்களாக நாம் அறி கிறோம். மக்கள் பிரச்சனைகளுக்காகவும், கம்யூனிச இயக்க வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி, தியாக வாழ்க்கையை வாழ்ந்த தோழர்களை உலகறியச் செய்யவே இந்த நூலை எழுதத்துவங்கினேன்.  உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட் டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் அளப்பரிய தியாகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொடுவால் கோவிந்தம் மாள் யார்? அவருக்கு இந்த பெயர் வரக்காரணம் என்ன  என்பது குறித்து அறிய இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.  முன்னதாக தமிழ்நாடு அரசு, மார்க்சிய ஆய்வாள ரும், எழுத்தாளருமான எஸ்.வி.ராஜதுரைக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கியது குறித்து இந்நிகழ்வில் நினைவுகூறிப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். நிகழ்வில், மக்கள் சிந்தனை மேடை அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள்  யூ.கே.சிவஞானம், வழக்கறிஞர் கோபால் சங்கர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.