தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்! கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூன் 10- “கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின் கீழ், 25 சதவிகித இடஒதுக் கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்” என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. மேலும், அந்த நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என் றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ‘கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தின் கீழ், தமிழகத்தில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டு துவங்கப்பட வில்லை. இந்த திட்டம் முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், மாண வர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள் ளது’ என கோவையைச் சேர்ந்த மறு மலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே. ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மாநில அரசு தான் செலுத்தியது இந்த மனு கடந்த மே 22 அன்று நீதி பதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது, ‘தமிழகத்துக்கான கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்க றிஞர் ரவீந்திரன், “கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவிகித இட ஒதுக் கீட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 60 சதவிகிதம் தொகை யை ஒன்றிய அரசும், 40 சதவிகிதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு கடந்த 2021-ஆம் கல்வியாண்டு முதல் 2023-ஆம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதனால், 100 சதவிகிதத் தொகையையும் மாநில அரசு தான் வழங்கியது” என்று தெரிவித்தார். ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? “மாணவர்களின் கல்வி விஷயத் தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசானது, ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத நிலையில் என்ன நட வடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28 அன்று கூட்டம் கூட்டியுள்ளது. அத்துடன், ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். “தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காத தால் பள்ளிகள் பாதிக்கப்படுவார் களே” என நீதிபதிகள் குறிப்பிட்ட போது, “நிதி ஒதுக்காதது ஏன்? என ஒன்றிய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் வலியுறுத்தினர். அதனடிப்படையில், ஒன்றிய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதி பதிகள் கேள்வி எழுப்பியதற்கு, “அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை” என்றும் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் தெரி வித்தார். பாஜகவை தோற்கடித்தது காரணமா? அந்தக் காரணங்கள் என்ன? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, தமி ழக அரசின் கூடுதல் தலைமை வழக்க றிஞர் ரவீந்திரன் குறுக்கிட்டு, “ஒன்றி யத்தில் ஆளும் கட்சிக்கு தமிழ கத்தில் ஒரு எம்.பி. கூட இல்லை என்ப தால் நிதி ஒதுக்கவில்லை” என்றார். இந்த வழக்கு மீண்டும் மே 23 அன்று விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, “புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர் பாக ஒன்றிய அரசுடனான புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தி டாததால் 25 சதவிகித இட ஒதுக் கீட்டுக்கான கல்வித் தொகை ஒதுக் கப்படவில்லை” என்று வாதிட்டார். “பல்வேறு மாநிலங்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் கை யெழுத்திடவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நீதிபதிகள் இந்த வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பளித்த னர்.
தேசிய கல்விக்கொள்கையோடு இணைக்கக் கூடாது
“கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். ‘சமக்ரா சிக்ஷா திட்டம்’ என்பது புதிய கல்விக் கொள்கை – 2020ஐ அமல்ப டுத்துவதை போன்றது என மாநில அரசு கூறுவது உண்மையே. கல்வி உரிமைச் சட்டதின் கீழ் உள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமைச் சட்டத்தை அமல் படுத்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் ஒன்றிய – மாநில அரசு களுக்கு உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்றிய அரசு குறிப் பிட்ட சதவிகித நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை” என உத்தரவிட்டனர். மேலும், “மாநில அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொ டர்ந்துள்ளதால், இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் தாங்கள் பிறப்பிக் கவில்லை. 2024–25ஆம் நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், 3,586 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். இதில் ஒன்றிய அரசு பங்கு 2,151 கோடி ரூபாய். அதிலும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதி 200 கோடி ரூபாய்க் கும் குறைவானது, என்பதால், இந்த நிதியில் ஒன்றிய அரசின் பங்கை ஒதுக்கு வதில் எந்த சிக்கலும் இருக்காது. அதனால், கல்வி உரிமைச் சட்டத் தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். “சட்டத்தில் கூறியுள்ள படி, உரிய காலகட்டத்தில் இந்த தொ கையை தனியார் பள்ளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கிடைக்க வில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்” எனவும் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளனர்.