விருத்தாசலம்,பிப்.15- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடை எப்போதுமே வாடிக்கையாளர் கள் கூட்டத்தில் நிரம்பி வழியும். செவ்வாயன்று (பிப்.15) காலை வழக்கம்போல் ஜவுளிக் கடை ஊழியர்கள் கடையைத் திறக்க வந்தனர். சுமார் 10.30 மணிக்கு கடையைத் திறந்த போது 15 அதிகாரிகள் கொண்ட வருமான வரித்துறையினர் அங்கு வந்தனர். தங்களது அடையாள அட்டைகளை காட்டி கடையை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். வாடிக்கையாளர்கள் யாரையும் கடைக்குள் அனுமதிக்கவில்லை. இதேபோல் கடைக்குள் இருந்த ஊழியர் களையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. இதுகுறித்து ஜவுளிக்கடையின் உரி மையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கடைக்கு விரைந்து வந்தார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மு கத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். மேலும் புதுவையில் உள்ள ஜவுளிக்கடை உரிமை யாளரின் தம்பி வீடு உள்ளிட்ட 2 பேர் வீடுகளி லும் வருமான வரித்துறையினர் சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள பிரபலமான நகைக்கடையிலும் செவ்வாயன்று காலை 11 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கட லூர், திண்டிவனம், விருத்தாசலம் என்று ஒரே நாளில் மூன்று இடங்களில் சோதனை நடை பெற்றது.