tamilnadu

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு மார்ச் 24-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 
சொத்துக் குவிப்பு வழக்கு மார்ச் 24-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு  மார்ச் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டது. 2013 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், தற்போது விராலிமலை சட்டமன்ற உறுப்பின ராக உள்ளார். 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக  27 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக் களை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது  இல்லம் உள்ளிட்ட 56 இடங்களில் சோதனை  நடத்தினர். 2021 அக்டோபரில் பதிவான இந்த வழக்கில், விஜயபாஸ்கர் தனது பெயரிலும் மனைவி ரம்யா பெயரிலும் 35 கோடியே 79  லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும்  அசையா சொத்துக்களை சேர்த்ததாக புதுக் கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2023 ஆகஸ்ட் 5 முதல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, நிர்வாக காரணங் களால் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்திலிருந்து சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதுவரை 25 முறை விசார ணைக்கு வந்த இந்த வழக்கில், விஜய பாஸ்கர் 7 முறையும், அவரது மனைவி ரம்யா 2  முறையும், இவர்களது வழக்கறிஞர்கள் 19  முறையும் ஆஜராகியுள்ளனர். 27 ஆவது முறையாக நடைபெற்ற விசார ணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறி ஞர்களும், லஞ்ச ஒழிப்புத்துறையினரும் மட்டுமே ஆஜரான நிலையில், நீதிபதி வெங்க டேச பெருமாள் வழக்கை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.