சென்னை,மார்ச் 12- சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, ஜெயக்குமார் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீன் வழங்கினார். திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத் திட வேண்டும். திருச்சியிலிருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராகவேண்டும் என ஜெயக்குமாருக்கு நிபந்தனைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை புழல் சிறையி லிருந்து சனிக்கிழமை(மார்ச் 12) காலை விடுதலை செய்யப்பட்டார்.