மதுரை, ஜன.27- குடியரசு தின விழாவையொட்டி, அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் மதுரை கோட்டத்தின் “இந்தியாவுக்கான மக்கள் இயக்கம்” சார்பில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய மருத்து வக் கழக அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் என்.பி.ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். கருத்தரங்கில், உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, “அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவ ணம்” என்ற தலைப்பில் உரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகி 75 ஆண்டுகள் கடந்து உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், எந்த ஆட்சி முறை இந்தியாவுக்கு வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள், நாட்டில் எப்படி ஆட்சி செய்யப் போகிறீர்கள் என்ற ஆவ ணத்தையும் தயார் செய்யுங்கள் என்று ஆங்கிலேயர்கள் தெரிவித்த னர். அதன் அடிப்படையில் இந்தியா வுக்கான தனித்தன்மையுடன் உரு வாக்கப்பட்டதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்ட சரத்துகளை உருவாக்கி, அதை அன்றைக்கு இருந்த இடைக்கால மக்களவையில் விவாதம் நடத்தி, ஆவணத்தை இறுதி செய்து 1949 நவ.26 ஆம் தேதி இறுதியாக அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சமத்துவமும் பாகுபாடின்மையும்
இந்திய அரசு மொழியாலோ, மதத்தாலோ, பாலினத்தாலோ, வாரிசு உரிமையாலோ, எந்த ஒரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டப் படாது என்ற பிரகடனம் இதில் முக்கியம். இந்திய அரசமைப்புச் சட்டம் வாழும் ஆவணம் என்றால், அந்த ஆவணத்தின் இதயமாக அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவு உள்ளது. கடந்த 20 நூற்றாண்டுகளாக மனி தனை மனிதனாக கருதவில்லை, மனிதனை சமமாகக் கருதவில்லை. மனிதர்கள் சாதியாலும், மதத்தின் அடிப்படையாலும் பிரிக்கப்பட்டு பாகுபாடு நிறைந்ததாக சமூகம் இருந்தது. அந்த பாகுபாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவில்தான் நீக்கப்பட்டது. எனவேதான் அரசியலமைப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவு இதயம் என்றழைக்கப்படுகிறது.
அம்பேத்கரின் பங்களிப்பு
ஏழைகளை மனிதனாகவே ஏற்றுக் கொள்ளாத ஒருவர் எழுதி யதை மனுநீதி என்று வைத்திருக் கிறார்கள். நாங்கள் ஏன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எங்களுக்கு தேவையில்லை என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இன்று அரசியலமைப்புச் சட்டத்தை நான் மாற்றுவேன், மனு நீதியைப் பின்பற்றுவேன் என்று யாராவது சொன்னால், நமக்கு ஒரு சக்தி- ஆவேசம் ஏன் வரவில்லை என்றால், நாமே இதைப் படித்து எடுத்துக் கொள்ளவில்லை. மதச்சார்பின்மையின் சிறப்பு பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் அவர் களுடைய அரசியலமைப்புச் சட்டங் கள், அவர்கள் நாட்டில் உள்ள பெரும்பான்மை மதம் சார்ந்த அரசி யல் அமைப்புச் சட்டமாக இருக்கும். ஆனால் இன்றைக்கும் பெரும் பான்மை இந்துக்கள் வாழும் நமது நாட்டை மதச்சார்பற்ற நாடாக அறி வித்தது அரசியல் அமைப்பு. அரசியல் நிர்ணய சபையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், அந்த அவை உறுப்பி னர்கள் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகவே அறிவித்தார்கள். 75 ஆண்டுகள் நாம் பெருமையாக சொல்ல முடியும். இந்த ஆவணத்தால், பல்வேறு மத நம்பிக்கை கொண்ட மக்களும் சேர்ந்து வாழும் ஒரே நாடாக இன்றைக்கும் இந்தியா இருக்கிறது. தற்போதைய சவால்கள் தற்போது பாஜக தரப்பில் இரண்டு சட்டங்கள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. ஒன்று இஸ்லாமியர்களு டைய மத சார்பான சொத்துக்கள் (வக்பு வாரியம்) சட்டம். மற்றொன்று ஒரே நாடு, ஒரே தேர்தல். இந்த இரண்டு சட்டங்களையும் எளிதில் நிறைவேற்ற முடியாது. ஏனெனில் அவர்களின் மைனாரிட்டி அரசுக்கு நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு போன்றோரின் ஆதரவு தேவைப்படு கிறது.
மக்களின் அரசியல் விழிப்புணர்வு
மக்கள் சரியான முறையில் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு இந்த அரசியல் சட்டம் புரிந்துள்ளது. இந்த கட்சிக்கு பெரும்பான்மை கொடுக்கக் கூடாது என்று மக்கள் முடிவு செய்தனர். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சிலர் தங்களுக்கு ஏற்ற வாறு மாற்ற முயற்சிக்கும் முயற்சி களை அனைத்து ஜனநாயக சக்தி களும் ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இது எல்லாக் காலங்களி லும் பொருந்தக் கூடிய வாழும் ஆவணம்”. இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.லெனின் வரவேற்பு ரையாற்றினார். சோக்கோ அறக் கட்டளை இணை இயக்குநர் எஸ். செல்வகோமதி அரசியல் சாசன பாதுகாப்பு தீர்மானத்தை முன்மொ ழிந்தார். எல்ஐசி பென்சனர் சங்க பொதுச் செயலாளர் என்.சேகர் வழி மொழிந்தார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொருளாளர் டி.சித்ரா நன்றி கூறினார். இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.