புதுக்கோட்டை, அக்.22 - புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாண வர்களுடன் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு சனிக் கிழமை கலந்துரையாடினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறை யன்பு தலைமைச் செயலாளராக இருந்தபோது அனைத்துப் பள்ளி களிலும் ‘வாசிப்போர் மன்றம்’ தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் வாசிப்போர் மன்றம் தொடங்கப்பட்டது. வாசிப்போர் மன்றத்தின் 8-வது கூட்டத்தில் முன்னாள் தலைமைச் செயலாளரும் எழுத்தா ளருமான வெ.இறையன்பு சனிக்கிழமை மாண வர்களுடன் கலந்துரையாடினார். மேலும், தனது அறிவுரையை ஏற்று வாசிப்போர் மன்றம் தொடங்கியதற்கும், தொடர்ந்து எட்டு கூட்டங் களை நடத்தியதற்கும் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி முன்னாள் தலைமை செயலாளர் வெ. இறையன்புவை வரவேற்று மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, 9 ஆம் வகுப்பு மாணவி நெகாசினி வரைந்த இறையன்புவின் ஓவியத்தைப் பரிசாக வழங்கினார்.