சென்னை,மார்ச் 3- நவீன ஆடியோ சாதனங் களில் பயன்படுத்துதலில் கவனம் வேண்டும் என்று ‘மார்ச் 3 உலக காது கேட்கும் நாள்’முன்னிட்டு முதல்வர்ஸ்டாலின்எச்சரிக்கை விடுத்துள்ளார். யுனெஸ்கோவை தலைமை யகமாகக் கொண்ட உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் 3 தினத்தில் ‘உலக காது கேட்கும் நாள்’ கொண்டாடிவருகிறது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: புதிய புதிய ஒலிச் சாதனங் களைப் பயன்படுத்தும் நாம் அவற்றைப் பற்றிப் புரிதல் ஏற்படுத்திக்கொள்ள விழிப்புணர்வாக இந்நாள் அமைந்திருக்கிறது. மாணவச் செல்வங்களும் இளைஞர்களும் தங்களுடைய ஆடியோ சாதனங்களில் அதிக ஒலி வைத்து நீண்ட நேரம் கேட்டால், அவர்களுடைய காது நரம்புகள் பாதிக்கப்பட்டு, கேட்கும் திறன் இளம் வயதிலேயே குறைந்திட வாய்ப்புண்டு என்று மருத்துவர்களும் அறிவி யலாளர்களும் விடுக்கும் எச்சரிக் கையைச் சற்றே காது கொடுத்துக் கேட்டிட வேண்டும். வாழ்நாள் முழுதும் துல்லியமாய்க் கேட்கக் கவனமுடன் கேளுங்கள்! ஓய்வு நேரங்களில் இயற்கையோடு இணைந்திருங்கள்! அதிக ஒலி எழுப்பும் சாதனங்களிடமிருந்து விலகி இருங்கள்! எளிய உடற் பயிற்சி செய்யுங்கள்! வருங்கா லத்தை உடல் நலத்தோடு உற்சாகமாய் எதிர்கொள்ளுங்கள் என்று இந்நாளில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.