tamilnadu

img

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

தேனி,ஜன. 13- ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை  அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம், முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் விவசாயம்  பாதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூக்க ளின் விளைச்சல் அடியோடு பாதிக்கப் பட்டுள்ளது. மொட்டுக்கள் செடியிலேயே கருகி விடுவதாக விவசாயிகள் கவலை யுடன் தெரிவிக்கின்றனர்.  தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை வெள்ளியன்று கடுமையாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில  வாரங்களாக நிலவும் கடும் பனிப்பொழி வால் சந்தைக்கு  பூக்கள் வரத்து அடி யோடு குறைந்துள்ளது.  இதனால்  மல்லிகை  பூ கிலோ 3500 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் பிச்சிப்பூ ,முல்லை பூ, கன காம்பரம் ஆகியவை கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. வரத்து குறை வால்  ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகைப் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.  நிலக்கோட்டை  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு விவசாயிகள் சொற்ப அள விலே பூக்களை கொண்டு வருவதால் வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கினர். மல்லிகை ரூ.3500 முதல் 4000 வரை விலைபோனது,இதர பூக்கள் முல்லை பூ ரூ.-1800 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது,ஜாதிப்பூ எனும் பிச்சிப் பூ ரூ.1200க்கு விற்பனையானது,காக்க ரட்டான் எனும் மெட்ராஸ் மல்லி பூ ரூ.1800 முதல் ரூபாய் 2 ஆயிரம் வரை  விற்பனை யானது,கனகாம்பரம் பூ ரூபாய் ஆயிரத்து க்கு விற்பனையானது,அரளிப்பூ  ஒரு பை  ரூ.550- க்கும்,ரோஜா ஒரு கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது. மாலை கட்டும் பூக்கள் அனைத்திற்கும் நல்ல விலை கிடைத்துள்ளதால் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.