tamilnadu

img

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி,ஜன.24- மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக சுருளி அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் .  கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு  தமிழ கத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து  ஏராளமான  சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். இவர்கள் சுருளி அருவியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மேகமலை அருகே சுருளி அருவிக்கு தண்ணீர் வரும் தூவானம் அணை, அரிசிப் பாறை, ஈத்தகாடு வனப்பகுதி களில் கடந்த இரண்டு நாட் களாக  மழை பெய்தது.இத னால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி, சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறை யினர்  தடை விதித்துள்ளனர்.