அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு துவக்க விழா
அறந்தாங்கி, ஜுன் 6- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மேல்நிலை முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக பன்முக பட்டிமன்றப் பேச்சாளர் கல்பனா தர்மேந்திரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் ஆசிரியர் தமிழ் செல்வம், பட்டய தலைவர் பாப்புலர் கேட்டரிங் தாளாளர் வீரதுரை, முன்னாள் தலைமை ஆசிரியர் தெய்வக்கனி மற்றும் தட்சிணாமூர்த்தி வாழ்த்திப் பேசினர். நிகழ்வில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். பூரணி நன்றி கூறினார்.