tamilnadu

img

என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ : 5 பேர் படுகாயம்

கடலூர்,டிச.22- நெய்வேலியிலுள்ள என்எல்சி இந்தியா நிறு வனத்தின் புதிய அனல் மின்  நிலையத்தில் ஏற்பட்ட  தீ விபத்தில் படுகாய மடைந்த 5 பேரும் மேல்  சிகிச்சைக்காக சென்னை  தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) இந்தியா நிறுவனத்தில் நிரந்தரப் பணி யாளர்கள், ஒப்பந்த பணி யாளர்கள் என சுமார் 16,000  பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் முதல் சுரங்கம், இரண்டா வது சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம் ஆகிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும், இரண்டாவது அனல் மின் நிலையம், இரண்டாவது அனல் மின் நிலைய விரி வாக்கம், புதிய அனல் மின்  நிலையம் ஆகிய 3 அனல்  மின் நிலையங்கள் உள்ளன.  இங்கு வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மூலம் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படி தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வியா ழனன்று(டிச.22) மதியம் 12 மணிக்கு புதிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை அள்ளிக் கொட்டும் பணி யில் தொழிலாளர்கள் ஈடு பட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத் தில் திருநாவுக்கரசு என்ப வர் உள்ளிட்ட 5 தொழிலா ளர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த தொழி லாளர்கள் 5 பேரையும் மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனையில் சேர்த்த னர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லொ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து நெய்வேலி நகர காவல்நிலைய போலீ சார் விசாரணை நடத்தி வரு கின்றனர். தீ விபத்து ஏற்பட்ட  புதிய அனல் மின் நிலை யத்தில் என்எல்சி தீய ணைப்புத் துறையினர் தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.