tamilnadu

img

40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்...

மதுரை:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள்  தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்குவதற்கான பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப் பட்டது.

தல்லாகுளம் திருமுக்குளத்தில் மழைநீர் சேகரிப்பதற்காக வாய்க்கால் கள் தூர்வாரப்பட்டு சுற்றுப் பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீர்தடையின்றி சென்று திருமுக்குளத்தில் சேகரிக்கவும்,  டவுண்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் மழைநீரை  சேகரிக்கும் வகையில் ரயில்வே நிலையம், கட்டபொம்மன் சிலை வடக்குப் புறம், தங்கரீகல் தியேட்டர் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீர் சாலைகளில் தேங்காமல் குழாய்கள் மூலம்டவுண்ஹால் ரோடு தெப்பக்குளத்திலும் செல்வதற்கு வழிவகை செய்யப் பட்டது. இதனால் மதுரையில் வெள் ளிக்கிழமை பெய்த மழையால்  டவுண்ஹால் தெப்பக்குளத்திலும், தல்லாகுளம் திருமுக்குளத்திலும் மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 33 ஊரணிகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக கோசாகுளம், சிலையநேரி, கோட்டங் குளம், கம்பன் ஊரணி, உத்தங்குடி ஊரணி, முத்துப்பட்டி கல்தார் ஊரணி,சூறாவளிமேடு ஊரணி, மானகிரி ஊரணி, திருப்பாலை வண்ணான் ஊரணி, அனுப்பானடி சொக்காயி ஊரணி,மாட்டுத்தாவணி சாத்தையாறு ஊரணி, மிளகரணை ஊரணி, உலகனேரிகுட்டம் ஊரணி, மஸ்தான்பட்டி ஊரணிஆகிய ஊரணிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப் பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கும் இடங்களாக 280 இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்து இடங்களிலும் மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப் பட்டுள்ளது,  உபயோகமற்ற நிலையில் இருந்த 412 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிக்கப் பட்டு வருகிறது.