சென்னை,ஜூன் 21- மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த திங்கள் கிழமையன்று கடலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்கள் கொண்டு வந்த சுறா, பாறை, மத்தி உள்ளிட்ட மீன்களை வியாபாரிகளும், மீனவர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். பொதுவாக 5 நாட்களில் 5 ஆயிரம் கிலோ மீன்கள் வரை கிடைக்கும் எனவும், ஆனால் தற்போது 3 ஆயிரம் கிலோ மீன்களே கிடைத்ததாகவும் மீன வர்கள் தெரிவித்துள்ளனர். முகத் துவார பகுதிகளை தூர்வாரினால் மீன்வளம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.