tamilnadu

img

எல்லோருக்குமான திருநாள் ! - எஸ்.வி.வேணுகோபாலன்

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள் தணியாத தாகத்தோடு இங்கு மங்கும் அலைபாய்ந்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டே இருந்த எண்ணற்ற முகங்கள்.  இரண்டு பெண் குழந்தைக ளின் தந்தையான ஒருவர், புதுவையில் இருந்து வந்தவர், ‘உள்ளே வந்தால் வாங்கிக் குவிப்பார்கள் என்று நன்றா கத் தெரிந்தே அழைத்து வந்தேன், அது தான் நடந்தது’ என்று பாசாங்குப் புகாரின்  ஊடே அவர்களது வாசிப்பின் பெருமையை வெளிப்படுத்தினார்.  வாசிப்பு குறைந்துவிட்டது என்று வெறுத்துப் போக ஒன்றுமில்லை.  வாசிக்க சிரமம் எதிர்கொள்வோர் அல்லது வாசிப்பு கைவராது இருப்போர் எல்லாக் காலங்களிலும் இருந்து வரு கின்றனர்.  வாசிப்பைக் கொண்டாடும் போது, வாசித்துக் கொண்டே இருப் போரைப் பார்க்கவேண்டும். வாசிப்பை விரிவுபடுத்த இறங்கும் போது வாசிக்காதவர்களை கவனிக்க வேண்டும். எளிமையான நூல்களை அளித்து அவர்களை இந்தப் பக்கத் திற்கு ஈர்க்க வேண்டும். 

ஒரு குடும்ப சங்கமத்தில் அல்லது பொதுவெளியில் கூட, குழந்தைகளைப் பார்த்தால் கொள்ளைச் சிரிப்போடும் ஆர்வத்தோடும்  கையில் வாங்கிக் கொஞ்சத் துடிப்போர் உண்டு. ‘இந்தக் குழந்தை ஏனோ வேற்று முகம் பார்த்தால் அழும்’ என்று சொல்கிறவர்க ளிடம் கூட எப்படியாவது வாங்கி, அழும் குழந்தையையும் சிரிக்க வைத்துத் தாங்களும் ரசித்து மகிழ்வார்கள். வேறு சிலருக்கு அச்சம் இருக்கும். தம்மால் குழந்தையைச் சரியான  பிடி மானத்தோடு வாங்கிக் கைகளில் ஏந்திக் கொள்ள முடியுமா, பத்திரமாகப் பெற்ற வள் கையில் ஒப்படைக்க முடியுமா என்று! அவர்களுக்கும் அந்தப் பேறு கிடைக்க அருகில் சிலர் பக்குவமாக எடுத்துக் கொடுத்துத் திரும்ப உரியவரி டம் கொண்டு சேர்த்துவிடுவதையும் பார்க்கிறோம்.  புத்தக வாசிப்பும்  அப்படியே தான்!

அடுத்தவர் தோள் பையைக் கைப்பற்றித் திறந்து புதிய புத்தகம் பார்த்தால் அள்ளிக் கொண்டு போய் வாசிக்கும் அன்பர்களுக்கு, குழந்தை கள் போலும் புத்தகங்கள். வாசிக்க  சிரமமாக இருக்கும் என்று சொல்லப் படும் நூலையும் கொஞ்சம் பாடெ டுத்து அதன் அலை வரிசைகளுக்குத் தங்களை மெல்லத் தகவமைத்துக் கொண்டு அந்த இசையையும் கேட்கப் பழகி வாசித்து முடித்து விடுவார்கள். தயக்கம் இருப்பவர்களை வாசிக்க வைக்க நினைவுபடுத்தும் நாள் இந்த நாள்.  நல்ல இலக்கிய வாசிப்பு, மனத்தி லுள்ள அழுக்குகளைக் கழுவிச் சுத்தம் செய்கிறது, மூளையிலுள்ள கரடு தட்டிப்போன கருத்துகளை அகற்றித் தூய்மைப் படுத்திக் கொடுக்கிறது. நமக்குள் இருக்கும் உறைபனியை உடைக்கும் கோடரி தான் வாசிப்பு என்கிறார் காஃப்கா.  ‘பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே’ என்ற மகாகவி பாரதியின் வருணிப்பில், பேசுதல், பொன்னாக ஒளிர்தல், சித்திரமாகத் தோன்றுதல்  என்று வெவ்வேறு புலன்களுக்கு இன்பம் தருவதைக் கொண்டாடுகிறார். ஒரு புத்தக வாசிப்பும் அப்படித்தான். கண்கள் படித் தாலும் காதுகள் ஒரு நேரடி உரையா டலை, விவரிப்பை கேட்டுக் கொண்டே இருக்கின்றன. உடல் சிலிர்ப்புறுகிறது சில நேரம் ! கண்ணீர் பெருகுகிறது ஒரு தருணத்தில்! நாசியில் நல்ல நறுமண மோ, நெருடும் ஒரு வாசனையோ எல்லாம் பிடிபட்டபடி நகர்கிறது வாசிப்பு. சுவை உணர்கிறது நாக்கு.  அடுத்தது என்ன என்று சிந்திக்கிறது மூளை. அமர்ந்த இடத்தில் ஒரு வாசிப்பு வேறு எத்தனையோ உலகங்களுக்கு அரவணைத்து அழைத்துச் சென்று திரும்பவும் இயல்பான இடத்திற்கே கொண்டு சேர்ந்துவிடுகிறது.

குழந்தைக்கு உணவைப் பழக்கும் போது அது முதலில் எதிர்க்கும், கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுவாள் தாய். அதைக் குழந்தைக்கான உண வாக சித்தரிக்காமல், குழந்தை எந்தச் சொந்தங்களையெல்லாம் அறிந்தி ருக்கிறதோ அவர்கள் உறவை யெல்லாம் சொல்லி அவர்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு வாய் என்று அங்கீ கரிக்க வைத்துக் கிண்ணத்தில் கொண்டுவந்த உணவை ஊட்டி முடிப் பாள் ஒரு நாள். மற்றொரு நாள், பறவை களை, விலங்குகளைத் துணைக்கு அழைத்து அவர்களோடு பகிர்ந்து உண்ண வைப்பாள். சிலபோது, ‘உனக்கு கிடையாது இது என் செல்லத் திற்கு’  என்று பாசாங்காக வேறு யாருக் காவது மறுத்துக் குழந்தைக்கு ஊட்டு கையில் ரசித்துச் சிரித்து உண்ணும் குழந்தை. புத்தக வாசிப்பும் அப்படித் தான், எனக்கே எனக்கு என்ற கொண் டாட்ட மனநிலையோடு தொடங்கும் வாசிப்பு, பரந்துபட்ட பகிர்தலுக்கு அழைத்துச் செல்கிறது.  வாசிப்புக்கு இளவயதிலேயே பழக்கும் பொறுப்பு  பெற்றோருக்கும் ஆசிரிய சமூகத் திற்கும் உண்டு.  உலக புத்தக தினம் வாசகர்க ளுக்கு மட்டுமல்ல, வாசிக்க வேண்டிய வர்களுக்கும் ஒரு திருநாள் தான்.