பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் உட்பட அனைவருக்கும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, வடவள்ளி பேருந்து நிறுத்தம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.