tamilnadu

விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த வேண்டுகோள்

ஈரோடு, பிப்.13 விவசாயிகள் மண் பரி சோதனை செய்து உரங்களை பயன் படுத்த வேண்டும் என்று வேளா ண்மை இணை இயக்குநர்  சி.சின்னசாமி கேட்டுக்கொண் டுள்ளார். சென்னையிலிருந்து ரயில் மூலம் கடந்த 10-ந் தேதி எம்.எப்.எல் நிறுவனத்தின் 1,204 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்த டைந்தது. மேலும் 11-ந் தேதி மங்க ளூரிலிருந்து ரயில் மூலம் ஐ.பி.எல்  நிறுவனத்தின் 1,300 மெட்ரிக் டன் யூரியா உரம் ஈரோடு வந்தடைந் தடைந்துள்ளது. இதனை லாரியில் ஏற்றும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது: உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது, உரிய முதன்மைச் சான்று படிவங்களை நிறுவனங்களிட மிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது, விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது,

 அனைத்து விற்பனை களையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற அனைத்து உர  விற்பனையாளர்களுக்கும் அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் உர விற்பனை  நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு  ஆணை 1985-ன் படி கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வட்டார அளவில் வேளா ண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வட்டார வேளாண்மை அலு வலர்கள் (உர ஆய்வாளர்கள்) தீவி ரமாக கண்காணிக்க உத்திரவிடப் பட்டுள்ளது. தற்போது ஈரோடு மாவட்டத் தில் யூரியா உரம் 4137 மெ.டன் னும், டி.ஏ.பி உரம் 843 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1087 மெ.டன்னும்,  காம்ப்ளக்ஸ் உரம் 4490 மெ.டன் னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்க ளில் போதிய அளவு இருப்பு வைக் கப்பட்டுள்ளது.   விவசாயிகள் மண் பரிசோ தனை செய்து உரப்பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பெற்று பயன் படுத்திட கேட்டுக் கொள்ளப்படு கிறது. விவசாயிகள் உரங்களை வாங்கும் போது மூட்டையில் அச்சடி க்கப்பட்ட விலையினை பார்த்து உரிய ரசீது பெற்று உரங்களை வாங்கி பயன்பெறு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.