சென்னை, ஏப். 8- தமிழ்நாடு சட்டப்பேரவையில் உணவு துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளியன்று விவாதம் நடைபெற்றது அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் சக்கரபாணி,”தற்போது வழங்கப்பட்டு வரும் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலம் பெற்றுவருகின்றனர். பயனாளிகள் இனிமேல் நேரடியாக அலுவலகங்களுக்கு வருவதை தவிர்க்கும் வகையில் அஞ்சல் துறையின் மூலம் இருப்பிடத்திற்கே புதிய மின்னணு குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்” என்றார். பொது விநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்ற னர். சிறப்பாகவும் பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில, மாவட்ட அளவில் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப் படும். கேழ்வரகு சிறந்த ஆரோக்கிய உணவாக கருதப்படு கிறது. நீலகிரி தர்மபுரி மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியி னர், மலைவாழ் மக்களின் பிரதான உணவாகவும் கேழ்வரகு உள்ளது. இம்மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் பருவத்தினர் அதிக அளவில் உள்ளனர். அவர்க ளுக்கு அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கினால் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதுடன் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் பாதுகாக்கப்படும். எனவே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப் படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.