tamilnadu

img

விழுந்தது நியூட்டனின் ஆப்பிள் மரம் -சிதம்பரம் இரவிச்சந்திரன்

1 ) விழுந்தது நியூட்டனின் ஆப்பிள் மரம்

சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிய உதவிய ஆப்பிள் மரம் விழுந்தது. சமீபத்தில் யுகே நாட்டை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய யூனிஸ் (Eunice) புயல் அந்த மரத்தை வேருடன் சாய்த்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் தாவரவியல் பூங்காவில் 1954ல் நடப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்த மரம் விழுந்த செய்தியை பூங்காவின் மேற்பார்வையாளர் டாக்டர் சாமுவேல் ப்ரோக்கிங்டன் வெளியிட்டார்.
பூங்காவின் நுழைவாயிலில் கடந்த 68 ஆண்டுகளாக வருவோரை வரவேற்றபடி நின்றிருந்த மரம் இப்போது இல்லை. இந்த மரம் நியூட்டன் ஈர்ப்புவிசையைக் கண்டறியக் காரணமாக இருந்த உண்மையான ஆப்பிள் மரத்தில் இருந்து பதியம் போட்டு குளோன் முறையில் உருவாக்கப்பட்டது. வளர்க்கப்பட்டது.

உண்மையான மரம் லிங்கன்ஷிர்ப் (Lincolnshirp) பகுதியில் கிராந்தம் (Grantham) என்ற இடத்தில் இருக்கும் வுல்ஸ்போர் மேனர் என்ற ஊரில் நியூட்டனின் வீட்டிற்கு முன் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் வீசிய கடும் புயலில் இது பாதிக்கப்பட்டாலும் மீண்டும் வளர்ந்து நியூட்டனின் புகழைப் பரப்பியது.

ஆப்பிள் மரத்தின் குழந்தைகள் பதியம் போடுதல் முறையில் புதிய கன்றுகள் உருவாக்கப்பட்டு உலகில் மூன்று இடங்களில் நட்டு வளர்க்கப்பட்டன.  விஐபியின் முக்கியத்துவத்துடன் பூங்காவில் இருந்த மரம் விழுந்ததுள்ளது.
 இது வருத்தம் தரும் செய்தி என்று பூங்கா நிர்வாகிகள் கூறினர். புயலால் இந்த மரம் விழுந்தாலும் அதன் நிலை ஹனி பங்கஸ் (honey fungus) என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மோசமாக இருந்தது. இழந்த மரத்திற்கு ஈடாக புதிய மரம் ஒன்றை வளர்க்கும் முயற்சியில் பதியம் போடும் வேலையைத் தொடங்கிவிட்டதாக பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. அதனால் இந்த மரம் விழுந்தாலும் புதிய கன்றுகள் பூங்காவில் நடப்பட்டு நியூட்டனின் புகழை என்றும் பறைசாற்றும்.

2 )  பூத்துக் குலுங்கும் கோல் மலர்கள்

சீன நாட்டின் ஒரு பகுதியில் உள்ள செங்டு நகரின் ஓர் ஆற்றின் இரு கரைகளிலும் சுமார் 67 ஹெக்டர் பரப்பளவில் கோல் மலர்கள் மலர்ந்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆற்றங்கரையில் குவிந்து பூக்களை ரசித்து மகிழ்கின்றனர்.

3 ) முத்து வளர்ப்பு

சீனாவின் ஜியாங் சூ (Jiang Su) மாநிலத்தின் ஹெய் ஆன்(Huai An)நகரில், முத்து வளர்ப்பு, உள்ளூர் லாபகரமான தொழிலாக உருவாகியுள்ளது. அங்குள்ள ஒரு விவசாயப் பண்ணையில் தொழிலாளர்கள் வேலை செய்யும் காட்சி