tamilnadu

கல்வியியல் பல்கலை.யில் போலிகள்

சென்னை, பிப்.11- தமிழ்நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்.  இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 650 கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகள். மற்ற அனைத்தும்  தனியார் சுயநிதிக் கல்லூரிகளாகும். பேராசிரியர், இணை, உதவி பேரா சிரியர்கள், பணியாளர்கள் 70 பேர் நிரந்தரம், சுமார் 50 பேர் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் என 120 பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நியமனம் என்பது முனைவர் பட்டம் முடிக்கவில்லை என்றாலும் தேசிய தகுதித் தேர்வு (நெட்), மாநில தகுதி தேர்வு (செட்) ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.

அதேநேரத்தில், இணைப் பேரா சிரியர் நியமனத்திற்கு கல்வியிய லில் முனைவர் பட்டம் கட்டாயம். 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். இதில் ஓராண்டு முதுநிலை பிரிவில் பணி அனுபவம் அவசியம். அதேபோல் பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டு தலின்படி 300 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இத்துடன், நெட், செட் தேர்வு அல்லது (பிஎச்டி)  முனைவர் பட்டமும் முடித்திருக்க வேண்டும் என்கிறது 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட யுஜிசி-யின் விதிமுறைகள். இதனை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வெளியிட்ட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக விளம்பரமும் உறுதி செய்கிறது.  ஆனால், பல்கலைக்கழக நிர்வா கம் இதற்கு நேர்மாறாக செயல் பட்டு வருவதாக புகார் எழுந்துள் ளது. அடிப்படைத் தகுதியே கூட  இல்லை என்றாலும் ‘பணம்’ இருந்தால் மட்டுமே போதுமானது. ஊழலுக்கு மகுடம் சேர்த்த முந்தைய அதிமுக ஆட்சியின் போது எழுந்த சில புகார்கள் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கூட்டத்தைச் சேர்ந்த ஆளுநர் மற்றும் துணைவேந்தர் ஒருவரால் மூடிமறைக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. பணம் இல்லாமல் எந்த ஒரு பணி நியம னமும் அரிதிலும் அரிதாகவே இருக்கிறது என்றும் கூறப்படு கின்றது.   உதாரணம், முன்னாள் துணை வேந்தர்களால் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டில் நிரப்பப்பட்ட பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான விருது,  ஆசிரியர் தேர்வாணையம் முது கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்காணல் குழு நியமனம் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள். 

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, கடந்த காலங்களில் நடந்த சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட திருவள்ளுவர், பாரதியார் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அண்மையில் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர். கைதும் செய்யப்பட்டனர். இந்த நட வடிக்கை உயர் கல்வியின் தரத்தை  மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை காட்டுவதாக ஆசிரியர்கள் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், ‘‘முளை யிலேயே கிள்ளாதது முற்றினால் கோடாளி கொண்டு வெட்ட வேண்டும்’’ என்ற கதையாக மாறி இருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகம். ‘‘ஓதி உணர்ந்து பிற ருக்கு உரை’’ என்னும் தாரக மந்தி ரத்தை கொண்டுள்ள இந்த ஆசிரி யர் கல்வியியல் பல்கலைக்கழ கத்திற்கு ஏற்பட்டுவரும் அவப்பெயரை, களங்கத்தை போக்குவதற்கு உயர்கல்வித் துறை அமைச்சரும் முதலமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.