சென்னை, ஜன. 25- சென்னை நுங்கம் ்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை ஒரு இளைஞர் சந்தேகப் ்படும்படியாக சுற்றித் திரிந்து ள்ளார். உடனே அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அவரைபிடித்து விசாரித் ்தனர். அப்போது அவர் தனக்கு பள்ளி கல்வித் துறை யில் வேலை கிடைத்துள் ்ளது என்று கூறி பணி நியமன ஆணையை காண்பி த்துள்ளார். அவர் மீதும், அந்த ஆணை மீதும் சந்தே கம் கொண்ட ஊழியர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரைபிடித்து விசாரித்தனர். விசார ணையில் அவர் ராயப் ்பேட்டை பி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந் ்திரன் (30) என்பதும், தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருவதும், இவர் பல நபர்களிடம் பள்ளிக் கல்வித்துறையில் அரசு வேலை வாங்கி தருவ தாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணைகளை தயாரித்து கொடுத்து மோசடி செய்து வருவதும் தெரிய வந்தது. இதை யடுத்து காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த போலி பணி நியமன ஆணை யை பறிமுதல் செய்தனர்.