tamilnadu

img

“மகளின் கிறுக்கல்கள் கூட தந்தைக்கு மிகப்பெரிய கவிதை” - எம்.ஜே.பிரபாகர்

நம் பெற்றோர்கள் நமக்கு கற்றுத் தந்த பாடம் நம் வாழ்வில் அழியாமல் நினை வில் எப்போதும் இருக்கும். கட்டுப்பாடான காவல் துறையில் கடைநிலை ஊழிய ராக பணி பொறுப்பேற்று அனை வரிடமும் எளிதாய் பேசி எண்ணம் போல் வாழ்க்கை, எல்லாம் நன்மைக்கே என்ற சொல்லுக்கிணங்க வாழ்ந்த காவலர் தனுஷ்கோடி குறித்த நூல் இது. காவல்துறை பணி என்பது பொதுமக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் செயல்படும் பணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பணியில்  இருப்பவர்கள் தன் குடும்பத்திற்காக செலவிடும் நேரங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும்.  காவல்துறை பணியில் இருக்கும் குடும்பத்தில் வீட்டிற்குள் உலகம் என கற்றுக் கொடுத்தவள் அம்மா.  உலகமே வீடாகலாம் என்ன கற்றுக் கொடுத்தவர் காக்கிச் சட்டை அப்பா என்கிறார் நூலாசிரியர். அனைவரும் விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் சென்றபோது காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட இயலாது மக்களின் பாதுகாப்பிற்காக குடும்பத்தை விட்டு தனியே  நிற்பவர்கள் தான் காக்கிச்சட்டைக்காரர்கள். அது  போன்று காவலர்களின் வீட்டில் விடுமுறை என்ப தெல்லாம் நாட்கணக்கில் இருக்காது. மணிக்கணக்கில் தான் இருக்கும். காவல்துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் விருப்பப்படி பணி செய்ய முடியாது. சட்டத்தின் விருப்பப்படியே பணி செய்ய வேண்டும். தன்னை தவறாக தூற்றும் ஆர்ப்பாட்டத்திற்கும் தூற்றிய வர்களின் காவலுக்காக தடியுடன் வருவார்கள் காக்கிச் சட்டைக்காரர்கள். பல மணி நேரங்களில் பழி வந்தா லும் அங்கே இவர்களது பணி தொடரவே செய்யும்.  தினசரி பிரச்சனைகளே அதிகம் சந்திப்பதால் இவர்களுக்கு முதலில் முதுமை எட்டிப் பார்ப்பது காக்கித்  தொப்பிக்குள் இருக்கும் தலைமுடி தான். இவர்களுக்கு பிறந்த நாளாக இருந்தாலும் புத்தாடை அணிவது காக்கி சட்டை ஆகத்தான் இருக்கும்.

தான் அப்பாவாகிவிட்ட செய்தியை கேட்ட பின்பு தான் காக்கிச்சட்டைக்காரருக்கு விடுமுறையே கிடைக்கும். அதுவும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கண்டிஷனோடு. குழந்தைகளுக்கு பணி விடை செய்ய பாக்கியம் இவர்களுக்குக்கிடையாதாம். ஒரு காக்கிச் சட்டைக்காரரின் மிகப்பெரிய சாதனை ஏதாவது ஒரு நல்ல நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒரு நேரம் உணவு உண்பது தான். தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு கூட நேரத்திற்கு சிறப்பு  விருந்தினராக வந்து செல்பவரே காக்கிச் சட்டைக்காரர்கள். காக்கிச்சட்டை யும், காக்கிச் சட்டை அப்பாவும் தன் பிள்ளைக்கு கற்றுத் தந்த வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம் காத்திருப்பதும், ஏமாற்றங்களை தாங்கிக் கொள்வது மட்டுமே. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு பாடத்தை கொடுப்பார்கள்.  தனக்கு கிடைக்காத சந்தோஷங்கள் தன் பிள்ளை களுக்கு தர வேண்டும் என்று எண்ணுவதும்  அவர் களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் இந்திய பெற்றோருக்கு இணை எந்த நாட்டிலும் இல்லை. ஒரு காவலரின் மகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவமே இந்த நூல்.  ஆகப் பெரும் பணி காவல்துறை பணி.  அதிலும் சில பல் பிடுங்கிகளும் உள்ளனர் என்பது நிஜம். ஆனால் ஒட்டுமொத்த கடைநிலை காவலர்களின் நிலையை வெட்ட வெளிச்சமாகிறது இந்த நூல்.  அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

“காக்கிச்சட்டை அப்பா”
நூலாசிரியர் : முனைவர் தனுஷ்கோடி லாவண்யஷோபனா,
விலை : ரூ.50/-
வெளியீடு: குமரன் பதிப்பகம்,
சென்னை -600017.
தொடர்புக்கு : 04424353742