tamilnadu

img

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை

கோவை, டிச. 15- ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறி யாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, உப்பிலிபாளை யம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் சங்கர் (29) பொறியாளர். இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்துள்ளார் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது. நாளடை வில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நிலையில், அதன் மூலம் தொடர்ந்து பணத்தை இழந்து  வந்துள்ளார். சூதாட்டத்தில் விட்ட பணத்தை எப்படியாவது  திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில்  தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 12 ஆம்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி, வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி, பின்னர், அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு  முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில், ஆன்லைனில் விளையாடு வதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை; நண்பர்கள் என்னை மன்னிக்கவும் என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.  ஆன்லைன் விளையாட்டால் பல தற்கொலைகள் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெறுவதின் காரணமாக ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்தது தமிழக அரசு. தமிழக அமைச்சரவையில் முடிவெடுத்து ஆளுநரின்  ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தும், இதுவரையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது  கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், கோவையில் பொறியாளர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.