உடுமலை, செப். 11- நெடுஞ்சாலைத்துறை யில் இருக்கும் காலிப்பணி யிடங்கள் மற்றும் போராட்ட காலத்தில் இறந்த பணி யாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு வலி யுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு எஸ்.வி.புரம் விஜயா மஹாலில் செப்.8 மற்றும் 9 இரண்டு நாட்கள் நடை பெற்றது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். இரண்டாவது நாள் மாநாட்டில், தீர்மானங்க ளும், புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அர சின் நெடுஞ்சாலைத்துறை யால் பராமரிக்கபட்டு வரும் நெடுஞ்சாலைகளை தனியாக பராமரிக்க வழங்கு வது என்று கடந்த அதி முக ஆட்சியில் நடைமுறை படுத்தியதை ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இந்த துறையில் காலிப்பணி யிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்கள் கடுமை யான பணிகளை மேற் கொண்டு வருவதை கணக் கில் கொண்டு ஊதியத்தில் 10 விழுக்காடு ஆபத்துப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக, மாநாட்டில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில தலை வராக மா. பாலசுப்பிரமணி யன், பொதுச் செயலாளராக ஆ.அம்சராஜ், மாநில பொரு ளாளராக இரா.தமிழ் மற்றும் துணை தலைவர்களாக து.சிங்கராயன், தி.ராஜ மாணிக்கம், கா.ரவி, பெ.முத்து, ச.மகேந்திரன் துணை செயலாளராக செ.சையதுயூசுப்ஜான், சு.செந்தில்நாதன், கு.பழனிச் சாமி, கோ.ஹரிபால கிருஷ்ணன், மா.மகாதே வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். பிரதிநிதிகள் மாநாட்டை நிறைவு செய்தும், புதிய நிர்வாகிகளை அறிமுகப் படுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு நிறைவுரையாற்றினார்.