tamilnadu

img

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 7 – பெண்களுக்கு மாதம்  ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு  உடனடியாக செயல்ப டுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வாழ்வுரிமை, வாழ் வாதாரம், ஜனநாயக உரிமைகள், வன்முறையற்ற வாழ்வு, மதச்சார்பின்மை ஆகியவற்றிக்கான உரிமை களை பாதுகாக்க, உழைக் கும் அமைப்புகள் ஒன்றி ணைந்து தேசம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாட உள் ளன. பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகள் அனைத்து பிரிவு மக்கள் மீதும் பெருந்  தாக்குதலை தொடுத்து வரும் நிலையில் சமத்துவம்,  நீதி மற்றும் வன்முறையற்ற வாழ்க்கைக்கான போராட் டத்தை வலியுறுத்தி, சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம்,  அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கம், மத்திய தர ஊழியர் அமைப்புகள் இணைந்து ஒன்றிய, மாநில  அரசுகளுக்கு முன் வைக்கும் கோரிக்கை சாசனத்தை வெளியிட்டுள்ளன. இந்த பிரகடனத்தை எஸ்.வாலண்டினா, ஆர்.ராதிகா (மாதர் சங்கம்), தன லட்சுமி (சிஐடியு), அனு (விவசாயிகள் சங்கம்)அ.து.கோதண்டம் (விதொச), க.நிருபன் சக்ரவர்த்தி (எஸ்எப்ஐ), ஜீவா (மாற்றுத் திறனாளிகள் சங்கம்), மெர்லின் (பிஎஸ்என் எல்இயூ) உள்ளிட்டோர்  செவ்வாயன்று (மார்ச் 7)  சென்னையில் வெளியிட்ட னர்.