கோவை, ஆக. 11. தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமி ழகத்தில் முதன்முறையாக, யானை கள் பாதுகாப்பு மாநாடு கோவையில் வெள்ளியன்று துவங்கியது. ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினத்தையொட்டி, இக்கருத்தரங்கம், கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், யானைகள் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் வகையில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில், அமைச்சர்கள், வனத்துறை அதிகாரி கள், சூழலியல் செயற்பட்டாளர்கள் பங் கேற்றுள்ளனர். கோவை, சரவணப்பட்டி நடை பெறும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த யானைகள் பாதுகாப்பு கலந்து ரையாடல் நிகழ்வில், ஆகஸ்ட் 2022-ல் அறிவிக்கப்பட்ட அகஸ்தியர்மலை யானைகள் காப்பகத்தையும் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள 5 யானைகள் காப்ப கங்கள் தமிழ்நாட்டின் வனப்பகுதியில் சுமார் 35 சதவிகிதத்தினை கொண்டுள் ளன. எதிர்காலத்தில் யானைகளின் இறப் பை தவிர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்தும், தனித்து விடப்பட்ட காட்டு யானைகளின் அதன் வாழ்விடத்தை பாது காப்பது, யானைகளின் மேலாண்மை நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ள யானை பாகன்கள் மற்றும் வனத்து றையினர் அடங்கிய ஒரு குழுவினை தமிழ்நாடு வனத்துறை முதன்மு றையாக தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இதுகுறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, யானைகள் பாது காப்பு தொடர்பாக பல குறிப்பிடத்தக்க நடைமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுகு றித்தும் இக்கலந்துரையாடல் நிகழ்வில் விவாதிக்கப்பட உள்ளது.
இம்மாநாட்டை, வனத்துறை அமைச் சர் எம்.மதிவேந்தன் தலைமையில் நடை பெற்றது. இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுற்றுச்சூழல், காலநிலை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் முதன்மை தலைமை வனத் துறை வனப்பாதுகாவலர் சுப்ரத் மல் ஹோத்ரா, ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாநாட்டை துவக்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கு களை பார்வையிட்டார். இதனைத்தொ டர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக தமிழ்நாட்டில் யானைகளுக்கு கருத்தரங்கம் நடத்தி யுள்ளோம். இதில் வனத்துறை அதிகாரி கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். யானையின் வாழ்விடம், வாழ்க்கை குறித்த கலந்துரையாடல் நடைபெறு கிறது. இது இரண்டு நாட்கள் நடைபெறு கிறது. இந்தியாவிலயே இதுபோன்ற கருத்தரங்கம் எங்கும் நடக்கவில்லை.வனத்தை பாதுகாக்க பல்வேறு நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறோம்.அதில் குழு அமைத்தும் ஆய்வு மேற் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் யானை எண்ணிக்கை அதிகரித்து உள் ளது. யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளோம். அவுட்-காய் (நாட்டு வெடி) போன்ற விடயங்களை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் பணியில் வனத்துறையில் ஈடு படுத்தபட்டுள்ளது. காடுகளை பாது காக்க நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும். வன ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம், என் றார்.