சென்னை, ஜன. 19- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் இலவச மின்சாரம் பறிபோகும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-1இன் 17 ஆவது மாநாடு பேரணி சனிக்கிழமை கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலிருந்து தொ டங்கி எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நிறை வடைந்தது. இதனைத் தொடந்து நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் தி. ஜெய்சங்கர் பேசியதன் சுருக்கம் வருமாறு: மின்சார வாரியத்தில் 50 ஆயிரத்திற் கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளன. பணிச்சுமை காரணமாக விபத்துகள் நிகழ்கின்றன. அண்மைக் காலத்தில் நிகழ்ந்த மின் விபத்தில் 120 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிய பணிகளை ஒப்பந்தம், வெளிமுகமை முறைகளில் மேற்கொள் ளப்படுவதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங்களை மறைமுகமாக மாநில அரசு செயல்படுத்துகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த மாநில அரசு, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கி ணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்த ஆய்வுக்குழு அமைப்பதை ஏற்க முடியாது. மின் வாரியத்தை தனியார்மய மாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி யாகவே ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் மாநில உரிமை, நுகர்வோரின் மின்சார உரிமை பறிபோகும். 100 யூனிட் இலவச மின்சா ரம் ரத்தாகும். ஒரு மின்விளக்கு இணைப்பு திட்டத்தில் உள்ள 65 லட்சம் குடும்பங் களும் மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும். சிறு, குறு, தொழில்கள், வியாபாரி களுக்கான மானிய விலை மின்சாரம், ஸ்லாப் முறை போன்றவை ரத்தாகும். தனியார் விருப்பத்திற்கு ஏற்ப மின் கட்டணம் உயரும். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளது. இதற்கு அரசின் தவ றான கொள்கையே காரணம். மின்வாரி யத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மக்க ளையும் இணைத்துக் கொண்டு போராடு வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்திற்கு சென்னை மண்ட லச் செயலாளர் ஏ.முருகானந்தம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் டி.பண்டாரம்பிள்ளை வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் வே.மன்னார், கிளை பொருளாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.