tamilnadu

சட்டம்-ஒழுங்கு பிரச்சனையால் கூட்டுறவுத் தேர்தல் ஒத்திவைப்பு

மதுரை:
மதுரை மேலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க தேர்தல் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டிமூன்றாவது முறையாக ஒத்திவைக்கப் பட்டது.மதுரை மாவட்டம் மேலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய புதனன்று அமமுக, அதிமுகவினர் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.திடீரென சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக  தற்காலிகமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த
அறிவிப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரின்கையொப்பம் இல்லை. முத்திரை மட்டுமேஇருந்தது.

இதற்கிடையில் தேர்தலுக்கான நேரம்தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரிகள் சென்று விட்டதாக அமமுக வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் குற்றம் சாட்டினார்.மதுரை தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 8923 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். 11 நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்  தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் புதனன்று  ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில்நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.வேட்மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் அமமுக- அதிமுகவினர் மனுத் தாக்கல்செய்தனர். அமமுகவினர் மனுத் தாக்கல்செய்ததற்கு ஒப்புகைச் சீட்டு வழங்காததால் மாவட்டச் செயலாளர் மா.ஜெயபால் தலைமையில்  அமமுகவினர் தேர்தல் அதிகாரியை கண்டித்து அரசரடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சட்ட ஒழுங்கைகாரணம் காட்டி தேர்தல் நிறுத்தப்பட்டது. தேர்தல் அதிகாரி அதற்கான அறிவிப்பை ஒட்டிவிட்டுச் சென்றார்.