சென்னை, அக். 23- ரயில்வே ஊழியர்களின் பேராதரவோடு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்திய ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 4, 5, 6 தேதி களில் நடைபெறுகிறது. தேர்தலை நடத்த வேண்டும் என்று டிஆர்இயு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை யடுத்து இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதை யடுத்து டிஆர்இயு தலைமையில் அமைந்து ள்ள கூட்டணி சார்பில் கடந்த மாதம் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து டிஆர்இயு-வின் சின்னமான நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு கேட்டு அனைத்து ரயில் நிலையங்கள், ரயில்வே பணி மனைகள், முன்பதிவு மையங்கள், ரயில்வே நிர்வாக அலுவலகங்கள், ஊழியர்களின் குடி யிருப்புகளில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெரம்பூரில் உள்ள லோகோ பணிமனையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் டிஆர்இயு செயல் தலை வர் அ.ஜானகிராமன் பேசுகையில், 1946ஆம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி 5 தொழிலாளர் உயிர் தியாகத்துடன் முதல் சம்பள கமிஷனை பெற்றுத் தந்தது, புதிய பென்ஷன் திட்டம் என்றால் நோ பென்சன் திட்டம் என ஊழியர்களுக்குப் புரிய வைத்து அவர்களை அணி திரட்டி ரயில்வே அலுவலகங் கள் முன்பும் நாடாளுமன்றத்தின் முன்பும் போராட்டம் நடத்தியதோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து குடும்ப பென்ஷ னும் இறப்பு கிராஜுவிட்டியும் இன்வேலிட் பென்ஷனும் பெற்று தந்தது டிஆர்இயு” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
டிஆர்இயு சாதனைகள்
மேலும் அவர் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பேசியதாவது: புதிய பென்சன் திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அங்கீகாரம் பெற்ற பெடரேஷன் தலைவர்கள் பென்ஷன் டிரஸ்டில் இயக்குனர்களாக இருந்ததை ஊழியர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி டிரஸ்டி லிருந்து அவர்களை வெளியேறச் செய்தோம். 55 ஆயிரம் தற்காலிக ஊழியர்களை நீக்கும் நிர்வாகத்தின் உத்தியை தகர்த்து நிரந்தர ஊழியர்கள் ஆக்கினோம். ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பணிபுரிந்து வந்த ஆயி ரக்கணக்கான தற்காலிக தொழி லாளர்களையும், கேண்டீன் ஸ்டோர்ஸ் ஊழியர்களையும் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் நிரந்தர ஊழியர்களாக்கினோம். இடையறாத போராட்டங்களின் மூலம் பயிற்சி முடித்த 5,000 ஆக்ட் அப்ரண்டீஸ்களை தெற்கு ரயில்வேயிலும்; ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களை இந்திய ரயில்வேயிலும் நிரந்தர ஊழியர்கள் ஆக்கினோம். ஒர்க் ஷாப் ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த இன்சென்டிவ் போனசை தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் பெற்றுத் தந்தோம். வாஜ்பாய் ஆட்சியில் நிர்வாக உத்தரவாக ஆர்டராக புதிய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் நிறை வேற்ற வாஜ்பாய் அரசால் இயல வில்லை; காரணம் மைனாரிட்டி அரசாக இருந்தது. அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் ஒப்புதல் பெறப்பட்டு கொல்லைப்புற வழியாக அமல்படுத்தி னார்கள். ஆனால் ராணுவத்தினருக்கு அதில் இருந்து விதிவிலக்கு அளித்த னர். புதிய பென்ஷன் திட்டம் தொழி லாளர்களை ஓய்வுக்குப் பின்னர் கையேந்த வைத்துவிடும் என அதை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்திய ஒரே சங்கம் டிஆர்இயு மட்டுமே. இடதுசாரி மக்களவை உறுப்பினர்களும் இந்த கோரிக்கை யை நாடாளுமன்றத்தில் எழுப்பினா ர்கள். ஆனால் மஸ்தூர் யூனியன் இணைந்துள்ள ஏஐஆர்எப் சம்மேளன மும், சங்கு யூனியன் இணைந்துள்ள என்எப்ஐஆர் சம்மேளனமும் அதை வரவேற்றன.
குடும்ப பென்ஷன் உத்தரவு
ஏஐஆர்எப்-ன் அன்றைய தலைவர் உமுராமல் புரோகித் புதிய பென்ஷன் திட்டத்தின் டிரஸ்டியாக அரசால் நியமிக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு வரை டிரஸ்டியாக செயல்பட்டார். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிக்க கோரி டிஆர்இயு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து, இடைக்கால உத்தரவை வாங்கியுள்ளது. அதில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரும் ஊழியர் பணிக்காலத்தில் காலமானால் அவரது துனைவியாருக்கு குடும்ப பென்ஷன், பழைய பென்ஷன் அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவு பெற்று தெற்கு ரயில்வே யில் அமல்படுத்த வைத்துள்ளது. கண்ணையாவின் வீரவசனம் என்னாச்சு பொன்மலையைச் சேர்ந்த நெப் போலியன் என்ற இளம் தொழி லாளி இறந்த போது அவரது துணைவி யாருக்கும், பெரம்பூர் லோகோ ஒர்க்சாப் இளம் தொழிலாளி கார்த்தி இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு பழைய பென்ஷன் அடிப்படையில் குடும்ப பென்ஷன் வாங்கி கொடுத் தோம். அதே போல் டிஆர்இயு புதிய பென்ஷன் வழக்கில் இன்வேலிட் பென்ஷனுக்கும் இடைக்கால தீர்ப்பை பெற்றோம். அதன் மூலம் கடந்த மாதம் சென்னை டிவிஷனை சேர்ந்த மணி என்ற தொழிலாளி உடற்செய லிழப்பு காரணமாக தகுதி இழப்புக்கு உள்ளானார். அவருக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தேதியி லிருந்து 8 லட்சம் ரூபாய் அரியர்ஸ் உடன் இன்வேலிடு பென்ஷனை டிஆர்இயு பெற்றுக் கொடுத்தது. ஆனால் புதிய பென்ஷனை எதிர்த்து வழக்கு போட டிஆர்இயு-வுக்கு பணம் தராதீர்கள், என்னிடம் பணம் உள்ளது நானே வழக்கு போடுவேன் என மஸ்தூர் யூனியனின் கண்ணையா பேசினார். ஆனால் இன்று வரை மஸ்தூர் யூனியன் வழக்கு போட வில்லை. கண்ணையா பேச்சு காற்றோடு போனதுதான் மிச்சம். இவ்வாறு அவர் பேசினார்.
டிஆர்இயுவுக்கு 8 அமைப்புகள் ஆதரவு
சங்க அங்கீகாரத் தேர்தல் பிரச்சா ரத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தை களின் ஆர்எல்எல்எப் தொழிற்சங்க அமைப்பு, லோகோ பைலட்டுகள் அமைப்பு, ஸ்டேஷன் மாஸ்டர்கள் அமைப்பு, இந்திய ரயில்வே அக்கவுன்ட்ஸ் ஊழியர்கள் அமைப்பு, இந்திய ரயில்வே கமர்ஷி யல் ஊழியர் அமைப்பு, இந்திய ரயில்வே கார்டு அமைப்பு, தெற்கு ரயில்வே இன்ஜினியர்கள் அமைப்பு, தெற்கு ரயில்வே மாற்று திறானாளிகள் அமைப்பு என 8 அமைப்புகள் டிஆர்இயு-வை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.