மதுரை, மே 5- மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5 வெள்ளியன்று நடைபெற்றது. கள்ளழ கர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இந்த விழாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர். மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவி லில் ஏப்ரல் 23 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து தல்லா குளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் புறப்பட்ட கள்ளழகரை வழிநெடுக தீபங்கள் ஏற்றியும், தண்ணீ ரை பீய்ச்சி அடித்தும், லட்சக் கணக்கானோர் வரவேற்றனர். தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வெள்ளி யன்று காலை 5.50 மணிக்கு கோரிப் பாளையம் அருகே உள்ள வைகை யாற்றில் தாமரை மலர்களால் நிரப்பப் பட்டிருக்கும் பகுதியில் இறங்கினார். இதனைக் காண மதுரை மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள், வெளி மாவட் டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வைகையாற்றுப்பகுதியில் குவிந்தனர். இரும்பு வேலி அமைத்து 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
திருவிழாவைக் காண வரும் மக்க ளுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் வைகை ஆற்றுக்குள் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் விரைவாக செல்வதற்கும் மற்றும் முக்கிய விஐபிகள் வருவதற்கும் ஆழ்வார்புரம் மூங்கில் கடைப்பகுதி செல்வதற்கும் ஏ.வி. மேம்பாலத்தில் ஒரு சிறு பகுதி உடைக்கப்பட்டு பாதை கள் போடப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் இரண்டு பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது.வைகை ஆற்றின் வடகரை பகுதி யில் தற்காலிகமான பாதை அமைக்கப் பட்டிருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்கி வழிபட்டனர். இந்நிகழ்வில் வணிகவரி-பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஸ்சேகர், காவல்துறை ஆணையாளர் நரேந்திர நாயர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
படம்: ஜெ. பொன்மாறன்