tamilnadu

img

மீண்டும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் கடமலை-மயிலை ஒன்றிய கண்மாய்கள்

நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கடமலைக்குண்டு, ஜுன் 2 - தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 543 ஏக்கர்  பரப்பளவில் பஞ்சம்தாங்கி, சாந்த நேரி, பெரியகுளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் அமைந்துள்ளன. இதில்  ஓட்டணை, பெரியகுளம், பஞ்சம்தா ங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால் கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படு கிறது. பிற கண்மாய்களுக்கு மேக மலை அருவி, ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் பெரும்பாலானவை தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் காணப்பட்டது. குறிப் பாக 64 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள பஞ்சம்தாங்கி, 81 ஏக்கர் பரப்ப ளவில் அமைந்துள்ள சாந்தநேரி, 109 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரி யகுளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும்பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். கண்மாய்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வருச நாடு பகுதி விவசாயிகள் ஒருங்கி ணைந்து குழு அமைத்து அதன் மூலம் கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் வாயிலாக தொட ர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.  அதன் விளைவாக கடந்த 2 வருடங் களுக்கு முன்பு பெரியகுளம், சாந்த நேரி, பஞ்சம்தாங்கி ஆகிய கண்மாய் களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதி காரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர்.

முதற்கட்டமாக கண்மாய் அள வீடு செய்யப்பட்டு கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதைத்தொ டர்ந்து பெரியகுளம், பஞ்சம்தாங்கி கண்மாய்களில் தனிநபர்கள் ஆக்கிர மித்து வைக்கப்பட்டிருந்த தென்னை மற்றும் இலவம் மரங்கள் அகற்றப் பட்டன.  அதன் பின்பு கண்மாய் சீர மைப்பு பணிகள் திடீரென நிறுத்தப் பட்டது. பணிகள் நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற் போது வரை மீண்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் பஞ்சம்தாங்கி மற்றும் பெரியகுளம் கண்மாய்களில் பொதுமக்கள் குப்பை கள் குவிக்கும் இடமாக மாற்றி வரு கின்றனர். மேலும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காததால் தனி நபர்கள் மீண்டும் கண்மாயை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, கண்மாய்களுக்கான வரத்து வாய்க்கால்கள் செடிகள், கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மூல வைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் கண் மாய்களுக்கு தண்ணீர் முழுமை யாக போய் சேருவதில்லை. இந்த நிலை நீடித்தால் கடமலை- மயிலை ஒன்றியத் தில் உள்ள அனைத்து கண்மாய்களும் தனிநபர்களின் வசம் போகும் நிலை உள்ளது. எனவே அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுத்து போர்க்கால அடிப் படையில் அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.