tamilnadu

img

ஓய்வுபெறும் ஊழியர்களை வெறுங்கையோடு அனுப்பாதீர்!

சென்னை, ஜூன் 26- நாங்குநேரியில் சக மாணவர்களால், பட்டியல் இன மாணவனும், அவனது சகோதரி யும் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட சம்பவத்தை அடுத்து, அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை வலியுறுத்தினார். சட்டமன்றத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, போக்குவரத்துத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது:

வெறும் கையோடு செல்லும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள்!

போக்குவரத்துத் துறையில் 20 ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இதில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மக்களின் வளர்ச்சிக்காக லாபம் இல்லாத வழித்தடங் களில் இயக்குவதால் போக்குவரத்துக் கழகங் களுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தொழி லாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடை, சேமிப்பு பணம் ரூ. 15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகங்கள் செலவு  செய்துவிட்டன. இதனால் ஓய்வுபெறும் ஊழியர்கள் வெறும் கையோடு செல்ல வேண்டியுள்ளது. 18 மாதங்கள் ஆகியும் பணப் பலன்கள் கிடைப்பதில்லை.  ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் களுக்கு கடந்த 104 மாதங்களாக அக விலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. நீதி மன்றம் உத்தரவு அடிப்படையில் அகவிலைப் படி உயர்வை உடன் வழங்க வேண்டும். ஓய்வுக் கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். காலாவதியான பேருந்துகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய பேருந்துகள் கூடுத லாக விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மினி பேருந்துகளை அரசே இயக்க வேண்டும்.  சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரை ஷிப்டு என்பதை முழு ஷிப்ட் (Full Shift) ஆக  மாற்றுவதை நிறுத்திட வேண்டும்.  புதுக்கோட்டையில் இருந்த டயர் பிளாண்ட் தேவகோட்டைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதனை மீண்டும் புதுக் கோட்டைக்கு மாற்ற வேண்டும். 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசாணை வெளியிடுக!

தமிழ்நாட்டில் வாழும் 68 வகை சமூக சீரமரபினர் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் டிஎன்சி - டிஎன்டி இரட்டை சன்றிதழ் முறையை தவிர்த்து டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டுமென கடந்த கூட்டத் தொடரின் போது நான் கோரிக்கையை வைத்தேன். இதை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சரால் இம்மக்களுக்கு டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் வழங்கப் படும் என்று அறிவிப்பு செய்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இம்மக்களுக்கு, ஒன்றிய - மாநில அரசுகளின் உரிமை களையும் சலுகைகளையும் பெறுவதற்கு ஏதுவாக அரசாணை வெளியிட்டு டிஎன்டி ஒற்றைச் சான்றிதழை விரைவில் வழங்கி 68 வகை சமூக சீர்மரபினர் மக்களை பாதுகாக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் மணிமண்டபம் 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதிகளை நவீன முறையில் சீரமைக்கவும், பழுதடைந்த கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்களை கட்டித்தர வேண்டுகிறேன்.  சிறுபான்மையினர் நலத்துறை : சுதந்திரப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர் களுக்கு மதுரையில் மணி மண்டபம் அமைத்து கொடுக்க வேண்டும். மாவட்டங்களில் செயல்படும் சிறுபான்மை மகளிர் குழுவிற்கு முழு மானியம் வழங்க  வேண்டும். சிறுபான்மையினரின் நலத் தொகைகள் முழுமையாக செலவழிக்கப்படு வதை ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

அடுத்த கட்ட வளர்ச்சிக்கு  திட்டம் உருவாக்க வேண்டும்!

ஆதிதிராவிடர் நலத்துறை: சமூக, பொரு ளாதார ரீதியாக ஆதிதிராவிட மக்களின் பின்தங்கிய நிலைமையை போக்க தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள், தாட்கோ கடன் என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிறகும் அந்த மக்களின் சமூக - பொருளாதாரம் எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆராய குழு அமைத்து ஆய்வுகளுக்கு உட்படுத்தி அடுத்தகட்ட வளர்ச்சிக்கு திட்டம் வகுக்க வேண்டுகிறேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்றால் அம்மக்களுக்கு நிலம், உணவு, வேலை, கல்வி வழங்குவதற்கான உத்தரவாதம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்திடாமல் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது எளிதானதாக இருந்திடாது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி யில் பட்டியல் சாதி சமூகத்தை சேர்ந்த சகோதர - சகோதரிகள் சக பள்ளி மாணவர் களால் தாக்கப்பட்டனர். இத்தகைய சம்பவத்தை விசாரித்து தடுத்திட நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகள் கட்டும் நிதியை  அதிகரிக்க வேண்டும் 

அயோத்திதாச பண்டிதர் குடி யிருப்புகள் மேம்பாட்டுத்திட்டம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்திற்கான தொகை ஆண் டொன்றுக்கு ரூ. 100 கோடி என்பதை அதிகரிக்க வேண்டும். கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடுகள் கட்டக் குறைந்தது ரூ. 10 லட்சம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிட கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிறித்துவ ஆதிதிராவிடர்களையும் பட்டியல் இனத்தவருக்குள் கொண்டு வந்து சலுகைகள் வழங்க வேண்டும்.

வேதனை தரும் வேங்கை வயல்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை தொகுதிக்குட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் குடி தண்ணீரில் மலத்தை  கலந்து இழி செயலைச் செய்த குற்றவாளி களை கைது செய்ய முதலமைச்சர் உத்தர விட்டார். ஆனாலும் குற்றவாளிகளை இதுவரை  கண்டுபிடிக்க முடியாதது கவலையளிக்கிறது.  அப்பகுதியில் வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, வேங்கை வயல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டுகிறேன்.

சாதியற்ற தமிழகத்தை உருவாக்குவோம்!

ஆணவப் படுகொலைகளை தடுக்கவும் நீதிமன்றம் முன்வைத்துள்ள சட்ட முன் வடிவை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி சாதி மறுப்புத் திருமண பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்து இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.  சாதியை வைத்து அரசியல் செய்வதை தடுக்க வேண்டும்; மக்களை பிளவுபடுத்தும் நோக்கோடு சாதி, மத வெறியூட்டும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.‌ பிற்போக்குத்தனமான கருத்துக்கள், மதவெறி,  சாதிவெறி, பெண் அடிமைத்தனம், குலக்கல்வி  போன்றவற்றை தூக்கி எறிந்து மதவெறியை புறந்தள்ளி சாதியற்ற தமிழகம் உருவாக்கி, சமூக நீதியை காப்பதில் முன்னோடியாக தமிழக அரசு விளங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன்கள் 2 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

மலக் குழி மரணங்களைத்  தடுக்க வேண்டும்! 

கடந்த 15 ஆண்டுகளில் மலக்குழிகளில் இறக்கப்பட்டு தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி  இறந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரி விக்கின்றன. இந்த மரணங்களைத் தடுக்க  புதிய தொழில் நுட்பங்களையும், இயந்திரங் களையும், கருவிகளையும் பயன்படுத்த வேண்டும்.  அனைத்துக் கட்டுமானங்களிலும் இந்திய அரசின் டிஆர்டிஓ கண்டுபிடிப்பான பயோ செப்டிக் டேங்குகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பவர்களுக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.  உலகின் பல நாடுகளில் உயர்கல்வியில் ஒரு துறையாக துப்புரவுப் பொறியியல் துறை உள்ளது. தமிழ்நாட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவுப் பொறியியல் துறை துவக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பின்னடைவுக் காலிப் பணியிடங்கள், அருந்ததியர் உள் ஒதுக்கீடு காலிப் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும். தூய்மைக் காவலர், அலுவலகக் காவலர், தபால், டெங்கு கொசு ஒழிப்பு, கடை நிலை ஊழியர்கள் அனைவரையும் அரசுப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். 

சமத்துவ மின் மயானங்கள் அமைத்திடுக!

பஞ்சமி நிலம் - பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் விதிகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதைக் கண்டறிந்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சாதியின் அழிக்க முடியாத அடையாளமாக இருக்கிற சாதிக்கு ஒரு மயானம் என்கிற முறையை தவிர்த்து “ஒரே  ஊர் - ஒரே சுடுகாடு” என்கிற சமத்துவ மயானங் களை தமிழகம் முழுவதும் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

தூய்மைக் காவலர் பணி  நியமனத்தில் பாரபட்சம் ஏன்?

கல்வித் துறைக்கும், காவல் துறைக்கும் இன சுழற்சி அடிப்படையில் 2012ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக  தூய்மைக் காவலர் பணி நியமனம் செய்யப் பட்டது. கல்வித் துறையில் சேர்ந்தவர்கள் பணி நிரந்தரம் செய்து விட்டனர். ஆனால், காவல்துறையில் சேர்ந்தவர்களை 10 ஆண்டு களுக்கு மேலாகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பாரபட்சமில்லாமல் காவல்துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளை நவீன முறையில் மேம்படுத்தி அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், பழு தடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

சாதிச் சான்று வழங்க  மறுக்கும் அதிகாரி!

பன்னியாண்டி மக்களுக்கு சாதிச் சான்று வழங்க ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டும் திருவண்ணாமலை வட்டாட்சியர் இம்மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து இச்சமூக மக்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். பழங்குடியினர் நலத்துறை: பழங்குடியினருக்கான வாழ்வாதார உரிமையான 2006 வன உரிமைச் சட்டத்தை  அமல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களை குடியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றக் கூடாது. வீடற்றவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்.  இனச் சான்று வழங்குவதை  எளிதாக்க வேண்டும்  பழங்குடியினர் பட்டியலில் புலையன், ஈரோடு மலையாளி, வேட்டைக்காரன், குறவன் இனத்தின் உட்பிரிவுகள், குருமன்ஸ் இனத்தின் உட்பிரிவுகள், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை இந்து புலையர் உள்ளிட்டோரை பழங்குடியினர் பட்டி யலில் இணைத்திட தொடர்ந்து வலியுறுத்தப் படுகிறது. அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இனச் சான்றிதழ் வழங்கும் முறையை எளிதாக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் துவங்கும் காலத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். 

அரசு கல்லூரி துவக்க வேண்டும் 

பழங்குடி மக்கள் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பழங்குடி மாணவர்களுக்கான ஒரு அரசு கலைக் கல்லூரி  துவக்கப்பட வேண்டும்.  திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலை முதல் குறுமலை வரை சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டும், சாலையை அமைக்க விடாமல் வனச்சரகர் இடையூறு செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புதூர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருளர் மக்கள் பயிர் செய்து வரும்  11 ஏக்கர் நிலங்களுக்கு அரசு பட்டா வழங்கிட  வேண்டும். மாவட்டம் முழுவதும் இருளர் மக்க ளுக்கு குடிமனைப் பட்டா, அரசின் வீடு கட்டித் தர வேண்டும். இவ்வாறு சின்னதுரை பேசினார்.