தஞ்சாவூர், செப்.24 - உலகத் தமிழர் பேரமைப் பின் 10-வது மாநில மாநாடு சனிக்கிழமை தஞ்சாவூரில் தொடங்கியது. உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் 10-வது மாநில மாநாடு, தமிழர் தொன் மை வரலாற்றுச் சிறப்பு மாநா டாக சனி, ஞாயிறு இரு தினங் கள் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதையொட்டி கீழடி, அரிக் கமேடு, பூம்புகார் ஆகிய இடங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண் களால் எடுத்து வரப்பட்ட தீபச் சுடர் மாநாட்டில் இருந்த நிர்வா கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநாட்டில் முனைவர் வீ.அரசு தலைமை வகித்து பேசுகையில், கீழடி, அரிக்க மேடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி முடிவுகளும், குறிப்புகளும் சிந்து சமவெளி, எகிப்திய நாக ரிகங்களுக்கு முற்பட்டதாக வரலாற்று நிபுணர்கள் குறிப் பிடுகின்றனர். தொன்மை மிக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி மீது இன்றைக்கு இந்தி, சமஸ்கிருத மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்து, தமிழ் மொழியை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. மொழித் திணிப்பு தமிழ ரின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலை சிதைக்கிறது. இவற்றையெல்லாம் மீட்டெடுக்க தமிழர்கள் ஒவ்வெ ாருவருக்கும் தமிழ்மொழி மீது பற்றுதல் வர வேண்டும்” என்றார். பின்னர் மாநாட்டு மலரை பேரமைப்பின் துணைத் தலை வர் சா.ராமன் வெளியிட்டார். அதனை பேரமைப்பின் துணைத் தலைவர்கள் டி.சி.எஸ்.தெட்சிணாமூர்த்தி, த. மணிவண்ணன், ம.பொன்னி றைவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.