கலைஞர் நூற்றாண்டு விழா - தி.மு.க. பவள விழா செப்டம்பர் 17 ஆம் தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை யொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகள் பெறுவோரின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை கி.சத்தி யசீலனுக்கு பெரியார் விருது, முன்னாள் அமைச் சர் மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ந.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.