tamilnadu

img

திமுக உண்ணாநிலை போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்க!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். (வலது) போராட்டத்தை வாழ்த்திப் பேசிய இந்திய மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மிருதுளாவின் உரைக்கு, அமைச்சர் உதயநிதி பாராட்டு.

ஆளுநர் வெறும் போஸ்ட்மேன் தான் - முதல்வர் விமர்சனம்

திமுக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்ற அதே வேளையில் சென்னையில் நடைபெற்ற திமுக பிரமுகர் ராமலிங்கம் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.  இவ்விழாவில் முதல்வர் பேசுகையில், ‘‘நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் ஆர்.என்.ரவி அல்ல, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான். மசோதாவை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட்மேன் தான் ஆளுநர்.  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது, உறங்காது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும், ஆளுநரின் இந்த போக்கை கண்டித்து தான் தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்துகிறது’’ என்று கூறினார்.

சென்னை, ஆக. 20 - நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஞாயிறன்று (ஆக.20) தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் உள்ளது. இந்த சட்டத்திலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா  நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவர் பரிசீலினையில் தற்போது உள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளை ஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி யில் 39 மையங்களில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற இருந்த போராட்டம் மே 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டங்களில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்று பேசினர்.

சென்னை வள்ளுவர் கோட்டத் தில் திமுக இளைஞரணிச்  செயலாள ரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டா லின் தலைமையில் நடைபெற்றது. நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த வர்களுக்கு போராட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்த போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும் துரை முருகன் தொடங்கி வைத்து பேசுகை யில், “நீட் தேர்வுக்கு எதிராக எத்த னையோ இளம் சிட்டுகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள் ளனர். ஆயிரக்கணக்கான மாண வர்களின் மருத்துவக் கனவு பறி போயுள்ளது. மாணவர்களின் மரணம் பற்றி ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. நீட் தேர்வை திணிக்கும் செய லில் மோடி அரசு வேகமாக இயங்கு கிறது. நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் ஒன்றிய அரசை அகற்றும். இந்தியை எதிர்த்தது போல நீட் தேர்வை அகற்றுவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. நீட் தேர்வு ஒழிந்தது என சரித்தி ரத்தில் இடம்பெறும்” என்றார். இந்தப்போராட்டத்தில் அமைச்சர் கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., சென்னை மேயர் ஆர்.பிரியா, மருத் துவர் அணி தலைவர் கனிமொழி சோமு எம்பி, செயலாளர் மருத்து வர் எழிலன் எம்எல்ஏ, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ,  திட்டக்குழு மாநில துணைத் தலைவர் பேரா. ஜெய ரஞ்சன் உள்ளிட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பேசினர்.

மாணவர் சங்கம் வாழ்த்து

இந்த போராட்டத்தை ஆதரித்து இந்திய மாணவர் சங்கத்தின் மத்தி யக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா பேசினார். அவரின் பேச்சால் கவரப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கையில் இருந்து எழுந்து வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

‘அடுத்தாண்டு நீட் கூடாது’

விழுப்புரத்தில் நடந்த உண்ணா நிலை போராட்டத்தில் உரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, “நீட் தேர்வு கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை முடிவு. எனவே, அடுத்த கல்வி யாண்டில் இருந்து நீட் தேர்வு இருக்கக் கூடாது” என்றார்.

பொதுநலப் போராட்டம்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் சார்பில் நடந்த உண்ணா நிலைப்போராட்டத்தில் உரை யாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி, “ நீட் தேர்வை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்றால் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த  இந்தியாவிற்கும் சேர்த்துதான் போராடுகிறோம். பொது நலன் சார்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.