மதுரை, ஜூன். 5- தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர் நலச்சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளி யன்று மக்களுக்கு தாங்கள் அலங்காரத்திற்கு வைத்துள்ள மலர்களை மக்களுக்குகொடுத்து நூதன முறையிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தி னார்கள் .பின்னர் தங்களு டைய கோரிக்கை மனு வினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். திருமணம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரசு விதி முறையுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் சங்க உறுப்பினர்கள் மனு அளித்தார்கள். மனுவில்“தமிழகம் முழுவதும் இத் தொழிலில் சுமார் 45 ஆயிரம் பேரும், இத் தொழிலை நம்பி 1. 5 லட்சம் தொழிலா ளர்களும் மதுரை மாவட் டத்தில் 5 ஆயிரம் நபர்க ளும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் திரு மணங்கள் நடைபெறாத சூழலில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம்.மேலும் திருமணங்களை பாதுகாப்புடன் நடத்திட எங்களின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை இத்துடன் தங்களின் கவ னத்திற்கு சமர்ப்பிக்க கட மைப்பட்டுள்ளோம். திருமணங்களை நடத்த அரசாங்கம் விதிமுறைக ளுடன் அனுமதியளிக்க வேண்டும் என்று கூறி யுள்ளனர்.