திருநெல்வேலி, ஜுன் 28- வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடந்து வரும் 2-ஆவது கட்ட அகழாய்வு பணியில், தமிழ் எழுத்து பொறிக்கப் பட்ட ஓடு கண்டெடுக் கப்பட்டது. நெல்லை மாவட் டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடந்த பணியின்போது ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த மாதம் 6-ஆம் தேதி 2-ஆவது கட்ட அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு பணியின்போது தமிழ் எழுத்து களில் புலி என்று பொறிக்கப் பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரையிலும் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சேகரிக்கப்பட்டு வரு கின்றன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும் இரும்புக் கால புதைவிட பகுதி வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக துலுக்கர்பட்டி அகழாய்வு பணி கள இயக்குனர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.