விருதுநகரில் 313 சந்தாக்கான தொகை ரூ.4.10 லட்சம் வழங்கல்
விருதுநகர், ஜூலை 15 - விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆவது கட்டமாக 313 தீக்கதிர் சந்தா விற்கான தொகை ரூ.4.10 லட்சம் வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட அளவிலான அரசியல் பயிற்சி முகாம் விருது நகர் மற்றும் திருவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, தீக்கதிர் ஆண்டுச் சந்தா 188, ஆறு மாத சந்தா 117 மற்றும் தினசரி சந்தா 8 என மொத்தம் 313 சந்தாவுக்கான தொகை ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் இரு மையங்களிலும் சேர்த்து வழங்கப்பட்டது. சந்தா தொகையினை மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் மற்றும் தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, எம்.தாமஸ், ஏ.குருசாமி, எம்.முத்துக்குமார், பி.என்.தேவா, வி.முருகன், எல்.முருகன், எஸ்.லட்சுமி, எம்.சுந்தர பாண்டியன், கே.முருகன் மற்றும் மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.