மாற்றுத்திறனாளிகள் சங்கம் முற்றுகை போராட்டம்
பெரம்பலூர், ஜூன் 18 - பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை அமைப்பா ளர் செல்லமுத்து, விவசாயிகள் சங்க ஒன்றி யத் தலைவர் சத்யசீலன், வேப்பூர் ஒன்றிய துணைத் தலை வர் மணிகண்டன், ஜனநா யக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னப் பொண்ணு உள்ளிட்டோர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினர். போராட்டத்தின்போது, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில்நூறு நாள் வேலையை மாற்றுத்திறனாளிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் அனைவருக்கும் முழு கூலி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக பதி வேடு வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி கள் ரேசன் அட்டைக்கு 35 கிலோ கார்டு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.