tamilnadu

img

எஸ்.சி., எஸ்.டி., உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சென்னை, பிப். 27 - இந்திய மாணவர் சங்கத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உயர் கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி  மாணவர்களுக்கான கல்வி உத வித்தொகை விண்ணப்பிப்பதற்கான காலத்தை நீட்டிப்பதாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் உறுதி யளித்துள்ளார். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி  உதவித்தொகை விண்ணப்பிப்ப தற்கான காலத்தை நீட்டிக்க கோரியும் விண்ணப்பிப்பதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்திய மாணவர் சங்கம் பிப்ரவரி 23ஆம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பிக்கும் காலம் பிப்ரவரி 28 (இன்று) முடிவதையடுத்து இன்னும் 44 விழுக்காடு மாணவர்கள் பதிய முடியாமல் உள்ள நிலையில் பிப். 27 திங்களன்று எஸ்எப்ஐ சார்பில் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தை

அதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாணவர் சங்க நிர்வாகிகளை அழைத்திருந்தார். அதற்கிணங்க  மாண வர் சங்கத்தின் மாநில செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாநில துணைத்தலைவர் காவியா, மாநிலக்  குழு உறுப்பினர்கள் அருண்குமார், குணா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை யில் பங்கெடுத்தனர். தற்போது மாணவர்களின் அடிப்படையான பிரச்சனையாக இருக்கக்கூடிய - ஆதார் அட்டையுடன் கைபேசி எண்ணை இணைப்பதில் உள்ள பிரச்சனை குறித்தும், வங்கிக்  கணக்கில் ஆதார் எண்ணை இணைப் பது, வருமானச் சான்று பெறுவதில் உள்ள சிக்கல்கள், அதேபோல பல்வேறு சான்றுகளை கணினியில் பதிவேற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், சாதி சான்றிதழை இணை யத்தில் பதிவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

சாதி சான்றிதழ் பதிவேற்றுவதில் உள்ள பிரச்சனைகள் களையப் பட்டுள்ளதாகவும், தற்போது புதிய  ஸ்மார்ட் கார்டு அல்லது பழைய சான்றிதழ் எண் அடிப்படையிலேயே கூட பதிவேற்றம் செய்வது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வருமானச் சான்றிதழ் குடும்பத்தில் இரண்டு, மூன்று மாணவர்கள் இருந்தா லும் பதிவதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதாகவும், வங்கி கணக்கில் ஆதார் மற்றும் இதர தகவல்களை இணைப்பதற்காக உடனடியான பணிகளை மேற்கொள்வதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல ஆதாரோடு கைபேசி எண்ணை இணைப்பதில் ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு பரிந்துரைப்ப தாக கூறினார். மேலும் இத்தகைய நடை முறை சிரமங்களை கணக்கில் கொண்டு  உதவித்தொகை விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசத்தை நீட்டிப்ப தாகவும், மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்ற வகையில் இணைய போர்ட்டல் கள் திறந்தே இருக்கும் எனவும் உறுதியளித்தார். இதற்கிடையே திங்களன்று காலை  கடலூர், திருச்சி மாநகர், திருப்பூர், திண்டுக்கல், சேலம், தென்காசி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், மதுரை, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.