திருச்சிராப்பள்ளி, ஜூன் 13- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் மாநிலத் தலைவர் நெ.இல. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொரு ளாளர் ந. ஜெயச்சந்திரன் சமர்ப்பித்தார்.வேலை அறிக்கையை மாநிலப் பொதுச்செய லாளர் பி.கிருஷ்ணமூர்த்தி வாசித்தார். கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓய்வூதி யர்கள் சமர்ப்பித்துள்ள அனைத்து பணக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறாத சத்துணவு மற்றும் அங்கன்வாடி யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் வரு வாய் கிராம ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதி யத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 18-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் அரை நாள் தர்ணா நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத் தலைவர்கள் கி. இளமாறன், பி.சுகுமாரன், த.குப்பன், பா.ராம மூர்த்தி, என்.அரங்கநாதன், ஆர். சுப்பிரமணி யம், செயலாளர் குரு. சந்திரசேகரன், எஸ். ஆறுமுகம், இரா.மனோகரன், மா.நாதன், பி.மகேஸ்வரி உட்பட மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் எஸ்.மதிவாணன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எம்.வி. செந்தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.