tamilnadu

img

தருமபுரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வெற்றி

தருமபுரி, ஜூலை 6 –  உறுதிமிக்க போராட்டத்தை மேற்கொண்ட தருமபுரி மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக தருமபுரி மாவட்ட நிர்வாகம் உறுதி யளித்துள்ளது.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர்‌ சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌அலுவலகம் முன் குடியேறும் போராட்டம் ஜூலை - 5 அன்று சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் எஸ்.நம்புராஜன் தலைமையில் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் வலுக் கட்டாயமாக கைது செய்தனர். பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணாமல் காவல்துறையின் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்த நடவடி க்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகள் சங்க தலைவர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் மாலையில் விடுதலை என அறிவித்தபோதும் கலைந்து செல்லாமல், கோரிக்கை களை நிறைவேற்றாமல் கலைந்து செல்லப்போவதில்லை என உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளின் உறுதி மிக்க போராட்டத்தையடுத்து வேறுவழி யின்றி சங்கத் தலைவர்களை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில்  ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சார் ஆட்சியர் சித்திரா விஜியன், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் செண்பகவள்ளி, தருமபுரி வட்டாட்சியர் ராஜராஜன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்பு ராஜன்‌, மாவட்ட பொறுப்பாளர் எம்.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரூரான், பொருளாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும்,  மாதம் ஒருமுறை ஆர்.டி.ஒ தலைமையிலும் குறைத்தீக்கும் நாள் கூட்டம் நடத்து வது, மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள்‌வேலை வழங்குவது, பிடிஒ தலை மையில் ஒன்றிய அளவில் குறை தீர்க்கும் நாள் ‌கூட்டம் நடத்துவது, மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் புரோக்கர் மூலம் நலத்திட்டங்களை வழங்குவது தடுத்து நிறுத்தவும், மாற்றுத்திறனாளிகள்‌அரசு உதவித் தொகையை எடுக்க வங்கிகள் ஏடிஎம் வழங்க வேண்டும். வங்கிகளில் எந்த வித நிபந்தனையுமின்றி 25 ஆயிரம் மானியம் 75 ஆயிரம் கடன் என ரூ. 1 லட்சம் வழங்கவேண்டும். சாலை போக்குவரத்து அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மூன்று சக்கர வாகனத்தை ஓட்டிக் காட்டினாலேயே ஓட்டுநர் உரிமம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 27 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கை விட்டு அனைவரும் கலைந்து சென்ற னர். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் உறுதிமிக்க தொடர் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியரே நேரி டையாக பேச்சுவார்த்தையில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தது மாற்றுத்திறனாளி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.