மதுரை, டிச.28- ரயில்களை இயக்கும் (பைலட்) களை ரயில்வே நிர்வா கம் விதிகளை மீறி ரயிலை இயக்கச் சொல்லி உத்தரவிடு வதை தவிர்க்க வேண்டும். விதி களை மீறாமல் ரயில்களை இயக்கும் ஊழியர்களை காத்தி ருப்பு அல்லது பணி இறக்கம் செய்வதை ரயில்வே நிர்வாகம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மண் டல டிஆர்இயு மற்றும் அகில இந் திய ரயில் ஓட்டும் தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.ஆர்.எஸ்.ஏ) ஆகிய சங்கங்கள் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மேற்கு நுழைவு வாயில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி ராமர் தலைமை வகித்தார். இதில் டிஆர்இயு முன்னாள் மதுரை மண்டல பொதுச் செயலாளர் ஆர். சங்கரநாராயணன், கிளைச் செயலாளர் சரவணன், ஏஐஎல் ஆர்எஸ்ஏ நிர்வாகி எம். ஜீவா கண்ணன், சிவக்குமார் உள் ளிட்டோர் பேசினர்.