tamilnadu

img

காவிரி நீர் பாய்ந்த பாசன வாய்க்காலில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்

“மாடு கட்டி போர் அடித் தால் மாளாது என்ப தால் யானைக்கட்டி போர் அடித்த பகுதி’’ என காவிரி நதி பாய்ந்த பகுதிகளை புகழ்ந்த காலம் சென்று, காவிரி பாய்ந்த பாசன வாய்க்காலை அடைத்து எங்களை நோயின்றி வாழவிடுங்கள் என  விவசாயிகளும், பொதுமக்களும் கூறும் அவலநிலை, மயிலாடு துறைக்கு ஏற்பட்டுள்ளது.  தோல்வியடைந்த பாதாள சாக்கடை திட்டத்தால் நகராட்சியின் ஒட்டுமொத்த கழிவுகளும் மயி லாடுதுறையிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் முக்கிய பாசன வாய்க்காலான சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படு கிறது. இதனால், கடந்த 14 ஆண்டு களாக மக்கள் துயரத்தில் வசிக் கின்றனர்.  கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஒன்றிய அரசு ரூ.20 கோடி, மாநில அரசு ரூ.15 கோடி, பொதுமக்கள் தரப்பில் ரூ.7 கோடி என ரூ.42 கோடியில் பெரும் ஊழ லுடன் அமைக்கப்பட்ட பாதாள  சாக்கடை திட்டத்தால் நகரவாசி கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் சுகாதாரம் இழந்து, நல்ல  காற்றை இழந்து, தொற்றுநோய் பாதிப்போடு காலத்தை கடத்து கின்றனர்.  தரமற்ற குழாய்களை கொண்டு தரமின்றி செய்த பணிகளால் ஓரிரு ஆண்டுகளிலேயே நகரச் சாலைகள் உள்வாங்க தொடங்கின. இதுவரை பல சாலைகளில் ராட்சச பள்ளங்களை ஏற்படுத்தி மக்களை ஒரு வழி செய்து வருகிறது. கடந்த 14 ஆண்டு களாக   பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து, ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு எங்கு பார்த்தா லும் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிம்மதியாய் வாழ தகுதியற்ற ஊர்களில் ஒன் றாக மயிலாடுதுறை மாறிவிட்டது. 

பாதாள சாக்கடையாக மாறியது எப்படி?

மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி  பின்புறம் உள்ள மணக்குடி கிரா மத்தையொட்டி அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பெரிய அளவிலான 4 குளங்கள் என  இயந்திரங்களின்றி எல்லாம்  வெறுமனே காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் நகராட்சியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள், வணிக வளாகங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் ஒட்டு மொத்த கழிவும் மன்னம்பந்தல் பகு தியிலிருந்தே சுத்திகரிக்கப்படாமல் கழிவுகளாகவே சத்திய வாணன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. முக்கிய ‘ஏ’ பிரிவு  பாசன வாய்க்காலான இந்த வாய்க்காலை நம்பித் தான் மன்னம்பந்தல், ஆறுபாதி, பரசலூர், மடப்புரம், முக்கரும்பூர், தென்பாதி, காலமநல்லூர், கிடங்கல், பூந்தாழை, கருவேலி, மருதம்பள்ளம் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார்  3 ஆயிரத்து 800 ஏக்கர்  விவசாய நிலங்கள் உள்ளன.  ஆனால், பாதாள சாக்கடை மலக்கழிவுகள் சத்தியவாணன் வாய்க்காலில் வழிந்தோடி வருவ தால், விவசாய நிலங்களில் அந்த  கழிவுகள் புகுந்து மண்ணின் தன்மையை பாழாக்கி விவசாயமே செய்யமுடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், சத்திய வாணன் வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்லும் 18-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களை யும் அடைத்து விட்டு, பம்புசெட் மூலம் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். 

அருகிலேயே காவிரி நீர் பாயும் ஆறு, வாய்க்கால்கள் இருந்தாலும், 14 ஆண்டுகளாக காவிரி நீரே இல்லாமல் சாகுபடி செய்யும் ஆபத்தான நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் தலை யிட்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன் ஆகி யோர் கூறுகையில், ‘‘118 கன  அடி கொள்ளளவு கொண்ட முக்கிய பாசன வாய்க்காலில் மயி லாடுதுறை நகராட்சி ஒட்டுமொத்த பாதாள கழிவுகளையும் திறந்து விடுவதால், 14 கி.மீட்டர் தொலை வில் கிராமங்கள், இதையொட்டி இரு பக்கங்களிலும் உள்ள கிரா மங்கள் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லா யிரக்கணக்கான மக்கள் நாள் தோறும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.  இந்த பாதாள சாக்கடை கழிவு களால் 90 விதமான தோல் நோய் களும், தொற்றுகளும் பல வடி வங்களில் உருவாகும் என்று  கூறப்படுகிறது. 14 ஆண்டுகளாக  போராடி வரும் இம்மக்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிக்காமல், காவிரி நீர் சென்ற வாய்க்காலில் சாக்கடை, மலக்கழிவுகள் வழிந் தோடுவது அதிர்ச்சியாக உள்ளது. நீரேற்று நிலையத்திலிருந்து நேர டியாக செல்லும் கழிவுகள், மன்னம்பந்தலில் உள்ள தொட்டிக் குளத்தில் விடப்பட்டு, அதிலிருந்து மற்ற 3 தொட்டிக்குளங்களில் வடி கட்டி சுத்திகரிக்கப்பட்ட பின்னர் தான் வாய்க்காலில் விடப்படும் என்று திட்டம் தயார் செய்யப் பட்டது. எந்த ஒரு சுத்திகரிப்பு வடி கட்டுதலும் இல்லாமல், கழிவு களை அப்படியே பாசன வாய்க்கா லில் திறந்துவிடுவதால் வாய்க் கால் ஓரம் உள்ள பகுதிகளில் நிலத் தடி நீர் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், அன்றாடம் உபயோகப்படுத்தும் நீரைக்கூட சுத்திகரித்து பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஆண்டுக் கணக்கில் நீடிக்கிறது. 

குறிப்பாக ஆறுபாதி, பரசலூர்,  ஆக்கூர், மடப்புரம் ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு எந்நேரமும் ஏதாவது ஒரு தொற்றுநோய் அப்பகுதிகளில் பரவுவதாக கூறு கின்றனர். எனவே, தமிழக அரசு மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக புதிய திட்டத்தை அறிவித்து ஊழலின்றி செய்ய வேண்டும், பாசன வாய்க்காலான சத்தியவாணன் வாய்க்காலை மறு புனரமைப்பு செய்து கழிவுநீர் ஓடாத வாய்க்கா லாக மாற்றவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது’’ என்றனர். பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளையும், சத்தியவாணன் வாய்க்கால், வாய்க்கால் வழியாக  வரும் கழிவுநீர், ஆக்கூர் இரட்டைக் குளங்களில் நிரம்பி கிடப்பதை யும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சிபிஎம் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பி னர் கண்ணகி, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் குண சுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.  இப்பிரச்சனையால் தொடர்  பாதிப்பை சந்தித்து வரும் ஆக்கூர் ஊராட்சி தலைவர் ஏ.ஆர்.சந்திர மோகன் கூறுகையில், ‘‘ஆக்கூர் இரட்டைக்குளங்கள் முழுவதும் பாதாள சாக்கடை கழிவுகள்தான் நிரம்பி காணப்படுகிறது. ஊராட்சி மூலம் இந்த இரு குளங்களிலும் ஒவ்வொரு நாளும் பிளிச்சீங் பவுட ரை மூட்டைக் கணக்கில் போட்டால் தான் துர்நாற்றம் குறைகிறது. வெளி யூர்வாசிகள், இவ்வழியாக செல் பவர்கள் நல்லநீர் என நினைத்து பயன் படுத்தினால் என்ன செய்வது?  மேலும் ஏராளமான கால்நடை கள் இக்கழிவுநீரை பருகி உயிரி ழந்துள்ளன. நிலத்தடி நீர் முற்றி லும் பாதித்துவிட்டது. இதேநிலை நீடித்தால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்’’ என்றார். மயிலாடுதுறை நகராட்சி யில் 18-க்கும் மேற்பட்ட கிராமங்க ளை சீரழிக்கும் இந்த கழிவுகளை அகற்றி, தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

- செ.ஜான்சன்