மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம்
உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்
மகாகும்பமேளா கூட்டநெரி சலில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள் ளது. பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி பலி யானதுடன் பலர் படுகாயமடைந்த னர். அரசு தரப்பில் 30 பேர் பலி யானார்கள். 60 பேர் காயமடைந்த னர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி பலி யான ஒருவரது மனைவி உரிய இழப்பீட்டை தர வலியுறுத்தி உத்த ரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கள் சௌமித்ரா தயாள் சிங், சந்தீப் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாகும்பமேளா கூட்டநெரிசலில் பலியானவரை உடற்கூறு செய்யா மல் பிரயாக்ராஜிலுள்ள மோதி லால் நேரு நினைவு மருத்துவக் கல்லூரி குடும்பத்திடம் ஒப்ப டைத்திருப்பது கவலையளிக்கி றது. மகாகும்பமேளா கூட்டநெரி சலுக்கு மக்கள் பொறுப்பபாக மாட்டார்கள். அக்கூட்டநெரிசலில் பலியான வர்களின் குடும்பங்களுக்கு இழப் பீடு அறிவித்த உத்தரப் பிரதேச அரசு, அதை குறிப்பிட்ட காலத் துக்குள், கண்ணியமான இழப் பீட்டை வழங்கும் கடமையும் அதற்கு உள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி மகாகும்பமேளா நிறைவடைந்த தினம் வரை, தேதி வாரியாக பலி யானவர்களின் எண்ணிக்கை, காய மடைந்தவர்களுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை, அறிவிக்கப்பட்ட இழப்பீடு, இழப்பீடு வழங்கப்பட்ட விவரம், இழப்பீடு நிலுவை ஆகி யன விவரங்களை அடங்கிய பிர மாண பத்திரத்தை உத்தரப் பிர தேச அரசு தாக்கல் செய்ய வேண் டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.