tamilnadu

img

இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்!

இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்!

வக்பு திருத்தச் சட்டத்தின்படி கேரளத்தில் வாரியம் அமைக்கப்பட்டதா?

திருவனந்தபுரம், ஏப். 18 - திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் கீழ் கேரள அரசு புதிய வக்பு வாரியத்தை அமைக்க முடிவு செய்துள்ளது என்று ஊடகங்களில் வெளியான செய்திகள், முழுக்க முழுக்க உண்மைக்கு மாறானது; அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டது என்று கேரள சிறுபான்மையினர் நல மற்றும் வக்பு அமைச்சர் வி. அப்துர் ரஹிமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: நடக்காத விஷயத்தை  வைத்து அவதூறு புதிய திருத்தப்பட்ட வக்பு சட்டத் தின் கீழ் கேரள அரசு புதிய வக்பு வாரி யத்தை அமைக்க முடிவு செய்துள்ள தாக ஒரு ஆங்கில பத்திரிகை வெளி யிட்ட செய்தி முற்றிலும் தவறானது; மற்றும் மக்களைத் தவறாக வழி நடத்துவது ஆகும். 2019 டிசம்பரில் அமைக்கப்பட்ட தற் போதைய வக்பு வாரியத்தின் பதவிக் காலம் முடிந்த நிலையில், பழைய வக்பு சட்டத்தின்படி புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற் போதைய வாரியம் தற்காலிகமாக தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘அதிகாரம்’ அளித்தும்  எதிர்த்து நிற்கும் கேரளம் திருத்தப்பட்ட சட்டமானது, வாரி யத்தின் அனைத்து உறுப்பினர்களை யும் மாநில அரசே நியமிக்க வேண்டும் என்று கூறினாலும், கேரள அரசு ஏற்கெ னவே முந்தைய சட்டத்தின்படி உறுப்பி னர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக் கும் செயல்முறையில் உள்ளது.  திருத்தப்பட்ட சட்டத்தின்படி, ஒரு வாரியத்தை உருவாக்க தேர்தல் அதி காரி அல்லது வாக்காளர் பட்டியல் தயா ரிப்பு தேவையில்லை. ஆனால், கேரள அரசானது, வக்பு விவகாரங்களை கையாளும் ஒரு கூடுதல் செயலாளரை,  தேர்தல் அதிகாரியாக நியமித்துள் ளது. முத்தவல்லிகளை தேர்ந்தெடுப்ப தற்கான வாக்காளர் வரைவு பட்டிய லையும், தேர்தல் விதிகளின்படி ஆட்சே பணைகளை சேகரிப்பதற்காக வெளி யிட்டுள்ளது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் திருத்தப்பட்ட சட்டத்தின்படி, ஒவ் வொரு உறுப்பினரும் அரசு நியம னத்தின் அடிப்படையில் மட்டுமே நிய மிக்கப்படுவார். ஆனால், தேர்தல் அதி காரி கேரளத்திலிருந்து முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர்களையும் தேர்தல் செயல்முறைக்காக பெற்றுள்ளார். ஏனெனில், வக்பு சட்டத்தை திருத் தும் முயற்சியை கேரளம் வலுவாக எதிர்த்துள்ளது. கேரள மாநில அரசு தனது கவலைகளை தெரிவித்து, வக்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட மொத் தம் 44 திருத்தங்களை எதிர்த்து ஒரு நினைவுக்குறிப்பை தயாரித்து, ஒன் றிய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளு மன்றக் குழுவின் தலைவரிடம் ஒப்ப டைத்துள்ளது. திருத்த மசோதாவுக்கு எதிராக கடுமையான ஆட்சேபனைக ளைத் தெரிவித்து, கேரள சட்டமன்றத் தில் ஒரு மனதான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப் பிய முதல் மாநிலம் கேரளம் ஆகும். அனைவரிடமும் ஆலோசித்து உறுதிசெய்யப்பட்ட நிலைபாடு 2024 அக்டோபரில் முஸ்லிம் அமை ப்புகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர் கள் மற்றும் சமூகத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு பயிலரங்கை நடத்தி, திருத்த மசோதாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை கேரள அரசு முடிவு செய்தது. புதிய திருத்த மசோதா முனம்பம் நில பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று பாஜக மற்றும் சில குழுக்கள் பரப்பிய பிரச்சாரத்தையும் அரசு எதிர்த்தது. புதிய சட்டம் எந்த விதத்திலும் முனம்பம் பிரச்சனையை தீர்க்க முடியாது என்று ஒன்றிய சிறு பான்மையினர் விவகார அமைச்சரே தெளிவுபடுத்தியதும் இங்கு குறிப்பி டத்தக்கது. திருத்தத்தில் முன்மொழியப்பட்ட சில விதிகளுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் வழங்கிய இடைக்கால உத்த ரவை கேரள மாநிலம் வரவேற்றது. வக்பு திருத்தச் சட்டத்தை தொடர்ந்து சட்டப்பூர்வமாக எதிர்க்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண் மைகள் இருந்தபோதிலும், அரசுக்கு எதிரான சில தவறான பிரச்சாரங்கள் இடது ஜனநாயக முன்னணி அரசின் தூய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு, தீங்கி ழைக்கும் நோக்கம் கொண்டவை ஆகும். இவ்வாறு அமைச்சர் வி. அப்துர் ரஹிமான் விளக்கியுள்ளார்.