சென்னை, மார்ச் 14 - 2008 - 2009ஆம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கிலிருந்து அவரை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விடுவித்தது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணையில் உள்ளது. ஜெயலலிதா காலமாகி விட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதிக்கக் கோரி வருமான வரித்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இந்த வழக்கு திங்களன்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனு மதித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.