கிருஷ்ணகிரி, ஏப். 22- கிருஷ்ணகிரியில் விசிக சார்பில் ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வலி யுறுத்தியும், ஊத்தங்கரை அருணபதியில் நடந்த படுகொலை களை கண்டித்தும் சனிக்கிழமை (ஏப்.22) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், அக்கட்சி யின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக, அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடை பெறும் மாவட்டமாக உள்ளது. ஏற்கனவே சுவாதி - நந்தீஸ் இரு வரும் கொடூரமாக கொல்லப் பட்டு, மைசூர் அருகே ஆற்றில் தூக்கி எறியப்பட்டார்கள். அண் மையில் ஜெகன் - சரண்யா. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்த வர்கள். விரும்பி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் சமூகத்திற்கு உள்ளேயே உட்சாதி முரண் அடிப்படையில் ஜெகன் பட்டப்பகலில் நெடுஞ்சாலையோ ரம் வெட்டி கொல்லப்பட்டார். ஊத்தங்கரை அருகே அருண பதி என்ற கிராமத்தில் சுபாஷ் -அனுசுயா ஆகிய இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்ட நிலையில், சுபாசின் தந்தை தண்டபாணி, பெற்ற மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த அவரது தாயார் கண்ணம் மாளையும் படுகொலை செய்துள்ளார். தலித் பெண்ணான அனு சுயாவை அவர் கொடூரமாக வெட்டியதில், படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலை யில், மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 3 சம்பவங்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தமிழகத்தில் இது போன்ற சாதி ஆணவக் கொலை கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. வழக்கமாக வட இந்திய மாநிலங்களில் தான் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளை பெற்றோர்களே கொடூரமாக கொலை செய்து, பொது இடத்தில் வைத்து அவ மானப்படுத்தி, சித்ரவதை செய்து, விஷம் கொடுத்து கொலை செய் வதை கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்திருக்கிறது என்றாலும் கூட, தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மைக் கால மாக நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பு திவ்யா - இளவரசன், இளவரசன் கொல்லப்பட்டார். சங்கர் - கவு சல்யா, இதில் சங்கர் கொல்லப் பட்டார். கோகுல்ராஜ் சந்தே கத்தின் பேரில், காதலிக்கிறார் என்று கடத்தி செல்லப்பட்டு கொடூர மாக கழுத்தை அறுத்து படு கொலை செய்தார்கள். இதற்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் கண்ணகி - முருகேசன், விஷம் கொடுத்து படுகொலை செய்தார் கள். இப்படி எண்ணற்ற பல ஆணவ கொலைகள் நடத்திருக் கின்றன. இந்திய அளவிலும், இது தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது.
எனவே ஒன்றிய அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. ஆனால், இந்திய அரசு சட்டம் இயற்றுவதில் தயக்கம் காட்டி வருகிறது. உச்ச நீதிமன்றம் ஆண வக் கொலைகளை, கொடூரமான கொலைகளை தடுக்க வேண்டும் என்பதற்காக சில வழிகாட்டு தல்களையும் வழங்கியுள்ளது. தற்போது திமுக அரசு தமிழ் நாட்டை ஆட்சி செய்து கொண்டி ரும் நிலையில், தோழமை கட்சி என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இருக்கிறது என்கிற நிலையில், ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அடையாள ஆர்ப்பாட்டம் தான் இது. கிருஷ்ணகிரி மாவட்டம் இதுபோன்ற கொடூரமான வன்கொடுமைகள் அரங்கேற்றும் மாவட்டமாக உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.