சென்னை, பிப்.5- நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்ற, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இது தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சனிக்கிழமையன்று (பிப்.5) தலைமைச் செயலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா. சுப்பிரமணியன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன் முடி (திமுக), கு. செல்வப்பெருந் தகை (காங்.), எஸ்.பி. வெங்கடேஸ் வரன் (பாமக), வீ.பி. நாகை மாலி (சிபிஎம்), டி. இராமச்சந்திரன் (சிபிஐ), ஏ.ஆர். ரகுராமன் (மதிமுக),எம். சிந்த னைச்செல்வன் (விசிக), இ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா (மமக), தி. வேல்முருகன் (தவாக) ஆகியோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரைக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வு விலக்கு தொடர்பான வரைவுத் தீர்மா னத்தை முன்மொழிந்தார். சட்ட மன்றக் கட்சித் தலைவர்களின் ஆலோ சனைகளுக்கு பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு:
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களை மிக வும் பாதித்துள்ளது. மாநில அரசு மருத் துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசு களிடம் இருந்து பறிப்பதாகவும் அமைந்துள்ளது. சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குத் தொடர்ந்து செல் லும் வசதி வாய்ப்புகள் பெற்றவர் களுக்கு மட்டுமே சாதகமாக அமைந் துள்ள இந்தத் தேர்வு முறை, பள்ளிக் கல்வியின் அவசியத்தையே சீர் குலைக்கின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். 12ஆவது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படை யிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கைமுறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களிடையே அசைக்க முடியாத கருத்தொற்று மையை நிலவுகிறது.
இதனை மனதில் கொண்டு, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக் கும் சட்டமுன்வடிவை 2021ஆம் ஆண்டு செப்.9 ஆம் தேதி சட்டமன்ற ததில் நிறைவேற்றினோம். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவை ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பவில்லை. இதனையடுத்து முதலமைச்சர் நேரடியாக ஆளுநரை சந்தித்து, சட்ட முன்வடிவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தை சேர்ந்த அனைத் துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்களும் இணைந்து, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இது குறித்து மனு அளித்தனர். ஒன்றிய உள் துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். தமிழக மாணவர் களின் மருத்துவக் கனவினை நன வாக்கிடவும், எதிர்கால நலனைப் பாதுகாத்திடவும், இது போன்ற இருப்பினும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில், சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டமுன்வடிவினை ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பவில்லை. ஐந்து மாதத்திற்கு பிறகு, அந்தச் சட்டமுன்வடிவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் பிப்.1 அன்று பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஏழை, நடுத்தர மாண வர்களின் நலனுக்கு எதிரானது. இச்சட்டத் திற்கு அடிப்படையான நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள கூற்றுகள் தவ றானவை என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சரியல்ல என நடுநிலையாளர்களும், சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை யற்றது என்ற ஆளுநரின் கருத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனைப் பாது காக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும். இந்த அடிப்ப டையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தைக் கூட்டி, அதில், நீட் தேர்வு குறித்த ஆளு நரின் கருத்துகளை தெளிவாக விவாதித்து, சரி யான வாதங்களை எடுத்துரைத்து, மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும். சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.